tag:blogger.com,1999:blog-66505964570614616802024-03-11T21:53:38.625-07:00Kuru Aravinthanஇது உங்களுக்கான வலைப்பூ...
எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள்,
உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.comBlogger777125tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-10373950736416800172023-11-03T05:06:00.005-07:002023-11-03T05:19:36.240-07:00Trees Changing Colors in Toronto<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3_SIFMNLkur9WLnkU-jFYqyDAbW7F60ARp-_wgfVCgooymlebqS2HHkamvVjx-rwrLe12waGmz0vCXPqulSq7RjVUO9vcxYwNwLj3gtaLlUWyBTTXuJ0h56lSkhQg-2yc9SXJIJf7tIqzInXsVxLL2VrSL81std1_r1m99Y6dCaKW1a9r8qr9jZgpA0u4/s977/Veedu-Kuru-Nov-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="602" data-original-width="977" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3_SIFMNLkur9WLnkU-jFYqyDAbW7F60ARp-_wgfVCgooymlebqS2HHkamvVjx-rwrLe12waGmz0vCXPqulSq7RjVUO9vcxYwNwLj3gtaLlUWyBTTXuJ0h56lSkhQg-2yc9SXJIJf7tIqzInXsVxLL2VrSL81std1_r1m99Y6dCaKW1a9r8qr9jZgpA0u4/s320/Veedu-Kuru-Nov-2023.jpg"/></a></div>
<a href="about:invalid#zSoyz"></a>
sdStonroepcmhcia8f9163iu
0
lhi4u1a8
h
2
497h9499g3f05f7085287t2uu
·
Shared with Your friends
நிறம் மாறும் மரங்களும் உறங்குநிலை மிருகங்களும் | குரு அரவிந்தன் | Nov 2023
YOUTUBE.COM
நிறம் மாறும் மரங்களும் உறங்குநிலை மிருகங்களும் | குரு அரவிந்தன் | Nov 2023
<a href="https://www.youtube.com/watch?v=Oib02BkQ2qI&ab_channel=Thaiveedu"></a>
https://www.youtube.com/watch?v=Oib02BkQ2qI&ab_channel=Thaiveedu
Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-88482084695762359112023-10-31T15:25:00.001-07:002023-10-31T15:25:36.272-07:00‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
<b>கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – 2023</b>
குரு அரவிந்தன்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZmaq5nyd0tsKLHfyBreRZCRRWnagDG8oJ2CjjSXkTP7NiYdwgjnwd3v4r0oDKcwHM7NLsGa29FZMk7N6TsBQ364L8RdnljpwsulGbXzzf61X55vUCS1x4Va6EEiPN5HQcgeIG935v7BP78oSRjnCNmKpooTjZYGhyphenhyphen7lq3avVQ45iGmWXWw33i4GgRLGUN/s1600/CTWA-%20Malar-Awards-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" height="320" data-original-height="1600" data-original-width="1236" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZmaq5nyd0tsKLHfyBreRZCRRWnagDG8oJ2CjjSXkTP7NiYdwgjnwd3v4r0oDKcwHM7NLsGa29FZMk7N6TsBQ364L8RdnljpwsulGbXzzf61X55vUCS1x4Va6EEiPN5HQcgeIG935v7BP78oSRjnCNmKpooTjZYGhyphenhyphen7lq3avVQ45iGmWXWw33i4GgRLGUN/s320/CTWA-%20Malar-Awards-2023.jpg"/></a></div>
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப் பெற்றது.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyd3MHZ-sg0HqR7W0AZfJofzMa1AJxlFfVvBzMGVo3STnToiPpMzyeCUIUIHmC6xgvywpclEH-djNE46tXRcAbmcvmDfI-4Np2D47P-XFeDgZ_pjiVGnDt9KMl33Urpu5J76ARmQK0xe1PtZ2XBmpRKZKQw-XOI47WMQ9aNDbeOKcx6Zd44lKfRcOAdwK_/s1024/Kuru-Ctwa-28-10-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" height="320" data-original-height="1024" data-original-width="768" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyd3MHZ-sg0HqR7W0AZfJofzMa1AJxlFfVvBzMGVo3STnToiPpMzyeCUIUIHmC6xgvywpclEH-djNE46tXRcAbmcvmDfI-4Np2D47P-XFeDgZ_pjiVGnDt9KMl33Urpu5J76ARmQK0xe1PtZ2XBmpRKZKQw-XOI47WMQ9aNDbeOKcx6Zd44lKfRcOAdwK_/s320/Kuru-Ctwa-28-10-2023.jpg"/></a></div>
எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய துணைத்தலைவருமான எழுத்தாளர் குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து தேனுஜா திருமாறன் ஆசிரியையின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து இணையத்தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை ஆசிரியரும், துணைச் செயலாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து விருது விழா மலர் வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ்மொழியை, முத்தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் கடந்த 30 வருடங்களாகச் சிறப்பாகச் செயற்பட்டுவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிச் சில மூத்த எழுத்தாளர்கள், மற்றும் ஆய்வாளர்களைச் சாதனையாளர்களாக மதிப்பளித்திருந்தது. இவர்களுடைய சாதனைகள் வெளியுலகிற்குத் தெரியாமல் முடக்கப்பட்டு விடக்கூடாது என்பதால், ஒருவர் வாழும்போதே அவரைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சார வளர்ச்சிக்காக ஆற்றிய அரிய சேவைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm_Pnv0OifHX5pZxIGCtwXYyBqJ5AnNJkcCdruD63uyAEY3hpt9gAWsce_d6fr5VV4L492dA0GkPxnl60a0uI55shi0jcQIW_lo_QbeG-WgjijAzw1hJR83LYDIHok-brSaFnCYMhBAIA4kk-X4CZwbFgDBDzulqSidSgEUpd5FkKr82f6kYdDtFnWyzKZ/s3260/CTWA-Awards-1-Oct%202023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="1949" data-original-width="3260" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm_Pnv0OifHX5pZxIGCtwXYyBqJ5AnNJkcCdruD63uyAEY3hpt9gAWsce_d6fr5VV4L492dA0GkPxnl60a0uI55shi0jcQIW_lo_QbeG-WgjijAzw1hJR83LYDIHok-brSaFnCYMhBAIA4kk-X4CZwbFgDBDzulqSidSgEUpd5FkKr82f6kYdDtFnWyzKZ/s320/CTWA-Awards-1-Oct%202023.jpg"/></a></div>
கனடாத் தமிழர்கள் பெருந்தொகையாகக் கனடா மண்ணிற்குப் புலம்பெயர்ந்து சுமார் 40 வருடங்களாகின்றன. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மண்டபங்கள் மூடப்பட்டதால், விருது விழாவைச் சென்ற முறை எம்மால் நடத்த முடியாமல் போய்விட்டது. எனவே இம்முறை அதையும் சேர்த்து எழுத்தாளர் இணையத்தின் சார்பாகப் 10 சாதனையாளர்களுக்கு விருது கொடுத்து மதிப்பளித்தோம். இவர்கள் தாயகத்திலும், புலம்பெயர்ந்த கனடா மண்ணிலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இதுவரை பல துறைகளிலும் ஆற்றிய பணிக்காக இந்த மதிப்பு மிக்க விருதுகள் வழங்கப் பெற்றன.
இந்த விருது விழாவில் பேராசிரியர் கலாநிதி பாலசுந்தரம் இளையதம்பி, பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன், முனைவர் பாலா சிவகடாட்சம், முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், திரு. தங்கராசா சிவபாலு, திரு. சின்னையா சிவநேசன், திரு பால குமாரசாமி (தேவகாந்தன்), சிந்தனைப்பூக்கள் திரு. பத்மநாதன், திரு தாமோதரம்பிள்ளை சண்முகநாதன் (சோக்கல்லோ சண்முகம்) திரு தெய்வேந்திரன் சண்முகராஜா (வீணைமைந்தன்) ஆகியோரே இம்முறை மதிப்பளிக்கப் பெற்றனர். விருதாளர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டபின் அவர்களின் ஏற்புரைகளும் இடம் பெற்றன.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9v6YqTuF389M0ExWkySMunZwPBXjp_8MKUcgi1uk3CojxajUvfx7-6gXrrxRxcJ6ysh93Vk4xao4mf6GwEPMp5OTxaYh2vxGYrwum_G4291O9-JGK8-WaLxO72vT1JAnU0S1GwSFwUHctcoF-whaFsKrotsgC1jZsOeD60c4zoUJ7aw4VgEIqeEorh0ow/s1600/CTWA-Malar-Committee-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" height="320" data-original-height="1600" data-original-width="1236" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9v6YqTuF389M0ExWkySMunZwPBXjp_8MKUcgi1uk3CojxajUvfx7-6gXrrxRxcJ6ysh93Vk4xao4mf6GwEPMp5OTxaYh2vxGYrwum_G4291O9-JGK8-WaLxO72vT1JAnU0S1GwSFwUHctcoF-whaFsKrotsgC1jZsOeD60c4zoUJ7aw4VgEIqeEorh0ow/s320/CTWA-Malar-Committee-2023.jpg"/></a></div>
1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ. சண்முகராஜா, அமரர் திரு. திருமாவளவன், கவிஞர் வி. கந்தவனம், திரு சின்னையா சிவநேசன், திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு. த. சிவபாலு, அமரர் திரு. சிவநாயகமூர்த்தி, பேராசிரியர் இ. பாலசுந்தரம், திரு. குரு அரவிந்தன் ஆகியோர் இதுவரை இணையத்தின் தலைவர்களாகப் பணியாற்றியதும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கது.
இணைத்தின் முன்னாள் காப்பாளர் மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி, முன்னாள் காபப்பாளர் அமரர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், தற்போதய காப்பாளர் கவிஞர் கந்தவனம், மற்றும் பண்டிதர் அமரர் மா.சே. அலெக்ஸாந்தர், அமரர் புலவர் மொகமட் ஹன்ஸீர் ஆகியோருக்கு எழுத்தாளர் இணையம் ஏற்கனவே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் துறையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் ஒன்ராறியோ போக்குவரத்து இணை அமைச்சர் திரு விஜே தணிகாசலம், மார்க்கம் நகரத்தின் 7 ஆம் வட்டாரப் பிரதிநிதி திருமதி ஜெனிற்றா நாதன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். விருதாளர்கள் பற்றிய அறிமுக உரையை திரு ரவி கனகசபை, திரு குமரகுரு கணபதிப்பிள்ளை, திரு எஸ். ஜெயானந்தசோதி, ரஜனி சுதாகரன், திரு அனுரா வென்சிலாஸ், திருமதி விமலாதேவி புஸ்பநாதன், திரு கணபதி ரவீந்திரன் ஆகியோர் ஆற்றினர்.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiARtm_S0qMwJu1QcYMhQQs4aCU7OyfqfV6skedeDzLdvjGmbtvS4OHWJ-vlc3i3eeoXJ1Ze-RXfcdqs66bplZD_E4bP83Iz67hwaHxJOjon0XnmUgA1Sdai0Rj6dhN6iJne3dL6FfoFZl0kV9k376nZF3u3NyZxrT1GvcVytfM78lybk7EW64QnD6jjcZI/s2872/CTWA-Award-3-Oct%202023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="1800" data-original-width="2872" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiARtm_S0qMwJu1QcYMhQQs4aCU7OyfqfV6skedeDzLdvjGmbtvS4OHWJ-vlc3i3eeoXJ1Ze-RXfcdqs66bplZD_E4bP83Iz67hwaHxJOjon0XnmUgA1Sdai0Rj6dhN6iJne3dL6FfoFZl0kV9k376nZF3u3NyZxrT1GvcVytfM78lybk7EW64QnD6jjcZI/s320/CTWA-Award-3-Oct%202023.jpg"/></a></div>
இவர்களுடன் கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் தலைமுறையினரான செல்வி ஆரணி ஞானநாயகன், செல்வன் தருண் செல்வம், செல்வி அர்ச்சயா மோகன்குமார் ஆகியோர் அழகு தமிழில் விருதாளர்களுக்கான அறிமுக உரை நிகழ்த்தியதைப் பலரும் பாராட்டியிருந்தனர். இதைத் தொடர்ந்து தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றியவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப் பெற்றன. எழுத்தாளர் இணையத்தின் செயலாளர் திருமதி கமலவதனா சுந்தா அவர்களின் நன்றி உரையைத் தொடர்ந்து மதிய உணவுடன் விருது வழங்கும் நிகழ்வு சிறப்பாக நிறைவேறியது.
Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-74242987268530461992023-10-31T15:11:00.002-07:002024-01-03T17:47:35.777-08:00Short Story - 2023
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtAZJe6e63MqLn8cK_gMB1gHg7AktQTyBW7lB92FM-D0pZlLAoqsZ8RScrNekWhCVgCReLGA2oJqM6KmCH0PG9i5irrzYYY3QnCyK_eXcNvpmNByArPOP03mNSDBA8Nh31YozegXT49iiIRyVsgE1XX82SrRnn-t9ABuw2ispj8J2F5w2_Ig128d6e1CX_/s1550/Eela-3rd%20girl-3-24-9-23.jpg" style="display: block; padding: 1em 0px; text-align: center;"><img alt="" border="0" data-original-height="1550" data-original-width="1082" height="631" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtAZJe6e63MqLn8cK_gMB1gHg7AktQTyBW7lB92FM-D0pZlLAoqsZ8RScrNekWhCVgCReLGA2oJqM6KmCH0PG9i5irrzYYY3QnCyK_eXcNvpmNByArPOP03mNSDBA8Nh31YozegXT49iiIRyVsgE1XX82SrRnn-t9ABuw2ispj8J2F5w2_Ig128d6e1CX_/w404-h631/Eela-3rd%20girl-3-24-9-23.jpg" width="404" /></a></div>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-79101303981292452662023-10-31T15:09:00.003-07:002024-01-03T17:48:19.287-08:00Writer Jeyamohan
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM_16WuYBtO3QykbjzepH1AWH6bZriPO5vEBY833bohgDlaONexErwwN_oRWps1gTZyhRrftjP07S1eRqr34BXLDq2qoRSKmJsd3gkhUHbKo-ZUytyn2ABJmqNVQzYaWZTC1RZGs6SsRIHA1FsqjHPoks3EZNjdrjRSfK1i8YGKF_TyspiEqagXip3vH5E/s1068/Eela-Sunday-%20Jeyamohan-29-10-2023.jpg" style="display: block; padding: 1em 0px; text-align: center;"><img alt="" border="0" data-original-height="885" data-original-width="1068" height="548" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM_16WuYBtO3QykbjzepH1AWH6bZriPO5vEBY833bohgDlaONexErwwN_oRWps1gTZyhRrftjP07S1eRqr34BXLDq2qoRSKmJsd3gkhUHbKo-ZUytyn2ABJmqNVQzYaWZTC1RZGs6SsRIHA1FsqjHPoks3EZNjdrjRSfK1i8YGKF_TyspiEqagXip3vH5E/w463-h548/Eela-Sunday-%20Jeyamohan-29-10-2023.jpg" width="463" /></a></div>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-24410379075402242192023-10-21T20:03:00.001-07:002023-10-21T20:03:10.729-07:00கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023
<b>கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023
</b>
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglRdTNOsIDLWscu0hqDe_vR3RVvOcv1BA31i_dY_SmLuw3A5WEt3rtVvkKylRuyNyB-FbPomZ_mxjmmJuZrM85Xxagk65GrFh6aWKSZwW9F8bWiDOAW5VwCXB4LPn8JeqPnhJ_dHP2z5uMcY2hCiB8L5fGNU6DJ1av-Pr9qUBR8OcIM2nvBrHHY8QIgU_v/s2258/Tholkapiyar-Malar-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" height="320" data-original-height="2258" data-original-width="1981" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglRdTNOsIDLWscu0hqDe_vR3RVvOcv1BA31i_dY_SmLuw3A5WEt3rtVvkKylRuyNyB-FbPomZ_mxjmmJuZrM85Xxagk65GrFh6aWKSZwW9F8bWiDOAW5VwCXB4LPn8JeqPnhJ_dHP2z5uMcY2hCiB8L5fGNU6DJ1av-Pr9qUBR8OcIM2nvBrHHY8QIgU_v/s320/Tholkapiyar-Malar-2023.jpg"/></a></div>
குரு அரவிந்தன்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1VYK8rGNXfmRh59EShK9rsEfr91oHntV3K2F0awCDA0hL6eLTNGC_n1rJjCvawJkpBwkyM5n12LLjaFOTDUU0WHANY0gpXk6QuhvIcV3eEp9QoWcXCIFyKCxKHwCdwRKm9AO3AHtXy-JibBf9MbOXmfBQIrGihyphenhyphen9pyXHu1KSUv6Weoj4gx_fxoLkK-4BF/s3509/Tholkapiyar-4-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="1993" data-original-width="3509" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1VYK8rGNXfmRh59EShK9rsEfr91oHntV3K2F0awCDA0hL6eLTNGC_n1rJjCvawJkpBwkyM5n12LLjaFOTDUU0WHANY0gpXk6QuhvIcV3eEp9QoWcXCIFyKCxKHwCdwRKm9AO3AHtXy-JibBf9MbOXmfBQIrGihyphenhyphen9pyXHu1KSUv6Weoj4gx_fxoLkK-4BF/s320/Tholkapiyar-4-2023.jpg"/></a></div>
சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல், கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, தொல்காப்பிய மன்றப்பாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப்பட்டது. அடுத்து தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் பெற்றது.
தலைமை உரையைத் தொடர்ந்து நடன ஆசிரியை திருமதி சியாமளா தயாளனின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. அதைத் தெடர்ந்து பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றி முதற்பரிசு பெற்ற ஆறு பிரிவுகளைச் சேர்ந்த மணவர்களின் உரைகள் ஒவ்வொன்றாக இடம் பெற்றன.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரின் உரைகளும், செல்வி ஜஸ்வரியா சந்துருவின் வாய்ப்பாட்டு இசைநிகழ்ச்சியும் இடம் பெற்றன. இந்த இசை நிகழ்ச்சிக்கு செல்வன் கீதன் விவேகானந்தன் மிருதங்கமும், நமிகா வசந்தகுமார் வயலினும் வாசித்தனர். தொடர்ந்து அடுத்த தலைமுறையிரை ஊக்குவிக்கும் சிறந்த நோக்கத்தோடு நடத்தப்பட்ட தமிழ் மொழி சார்ந்த போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்குப் பரிசுகளும், நிகழ்வில் பங்குபற்றிய தொண்டர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNubuzZhEkRDhpxqqXYciO2pJeBOWw4hMXPpxjvI3qzrrASkcQC5Equv8tVsVDufzdhjVpBkL62OOSKr5JBg-lhPlYX9oGSyvjr6I7uVHiaMyUmkIzan_kc8s4oiYRcRb1zBJpLsuPlseo5UPMSmYiiPnqP_m5Tc9k23ZqvletQ3uMuKdFXsNLNxT3SKKb/s3177/Tholkapiyar-3-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="1656" data-original-width="3177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNubuzZhEkRDhpxqqXYciO2pJeBOWw4hMXPpxjvI3qzrrASkcQC5Equv8tVsVDufzdhjVpBkL62OOSKr5JBg-lhPlYX9oGSyvjr6I7uVHiaMyUmkIzan_kc8s4oiYRcRb1zBJpLsuPlseo5UPMSmYiiPnqP_m5Tc9k23ZqvletQ3uMuKdFXsNLNxT3SKKb/s320/Tholkapiyar-3-2023.jpg"/></a></div>
அடுத்து கலைக்கோவில் நாட்டியக் கலாகுலநிதி திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. அடுத்து முதன்மை விருந்தினர் பேராசிரியர் முனைவர் ஜோசப் சந்திரகாந்தன் அடிகளாரின் உரை இடம் பெற்றது. தமிழக அரசு சார்பாக இலக்கிய விருது பெற்ற மூவர் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மன்றச் செயலாளர் திரு சி. சண்முகராசா அவர்களின் நன்றியுரையுடன் விழா சிறப்பாக முடிவடைந்தது.
இந்த நிகழ்வின் போது தொல்காப்பிய விழா மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. 279 பக்கங்களைக் கொண்ட இந்த மலரில் வாழ்த்துரைகளைத் தொடர்ந்து பலனுள்ள பல கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. பேராசிரியர் கு.வே. பாலசுப்ரமணியன், முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், சி. சண்முகராசா, எழுத்தாளர் குரு அரவிந்தன், யோகா அருள்சுப்பிரமணியம், ரஜிதா சூரியகுமார், சாரதா குமாரசாமி, பவானி சந்திரன், மருத்துவர் துளசி விக்னேஸ்வரன், கௌரிசிவம் குணரட்ணம், கஜரூபன் குகதாசன், பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன், முனைவர் பால.சிவகடாட்சம், முனைவர் ஜோதி எஸ்.தேமொழி, மருத்துவர் வரதா. கந்தசாமி, சின்னையா விமலநாதன், இலக்குவனார் திருவள்ளுவன், சிவ ஞானநாயகன், உமா சூரியகுமார், கலா அரியராசா, சண்முகலிங்கம் கந்தையா, விக்னேஸ்வரன் கணபதிப்பிள்ளை, த. சிவபாலு, சுவந்தி சங்கர், மருத்துவர் சாயி சர்மா, மேரி ஞானப்பிரகாசம், புட்பா கிறிட்டி, சாதனா பாலேந்திரன், சந்திரன் வேலாயுதபிள்ளை, முத்தையா அரியராசா, லலிதா. மகேந்திரன், லீலா சிவானந்தன், சசிகலா ஜீவானந்தன், கிருஸ்ணபிள்ளை ஆனந்தராஜா, அகணி சுரேஸ் ஆகியோரது கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
புலம் பெயர்ந்த மண்ணில் சிறப்பாக இந்த மலரை வெளியிட்டு ஆவணப்படுத்திய தொல்காப்பிய மலர்க் குழவினருக்கும், நிகழ்வைச் சிறப்பாக நடத்தி முடித்த செயற்குழுவினருக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-70144577922140363502023-10-21T19:59:00.000-07:002023-10-21T19:59:04.368-07:00Short Story Book - சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
பிரம்ம சாமுண்டீஸ்வரி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
சுலோச்சனா அருண்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho78B6-q5tcRiNA2erZPhcIzqGUEhEeZxueMq43qQ8N9IPmsRY-hp-yJLQvKJMNt1NyjMFk1ySZlZa25HHbwojwB_M7FS6J6ts_NY7dD-TEq-nG7IcDQnRwrqgQhksUB7S_kuCxBogz23Qk7U_oGfLKm4yGoUU9MsGV-lg5F1qaHYrWW4WEowTtuP5SLQ_/s4368/Book%20Cover-Kuvikam-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="3288" data-original-width="4368" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho78B6-q5tcRiNA2erZPhcIzqGUEhEeZxueMq43qQ8N9IPmsRY-hp-yJLQvKJMNt1NyjMFk1ySZlZa25HHbwojwB_M7FS6J6ts_NY7dD-TEq-nG7IcDQnRwrqgQhksUB7S_kuCxBogz23Qk7U_oGfLKm4yGoUU9MsGV-lg5F1qaHYrWW4WEowTtuP5SLQ_/s320/Book%20Cover-Kuvikam-2023.jpg"/></a></div>
சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், பரிசளிப்பு விழாவும் சென்னை காந்தி மண்டபச் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் யூலை 27 ஆம் திகதி 2023 மாலை 6:00 மணிக்கு, முனைவர் வவேசு அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும், மற்றும் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2022 யூலை தொடக்கம் 2023 யூன் மாதம் வரை சர்வதேசத் தமிழ் இதழிகளில் வெளிவந்த சிறுகதைகளை வாசித்து அவற்றில் சிறந்த ஒரு சிறுகதையை ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்து, அப்படித் தெரிவான 12 சிறுகதைகளைத் தொகுத்து சிறுகதைத் தொகுப்பாகத் தமிழகத்தில் இருக்கும் குவிகம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். இச்சிறுகதைத் தெரிவுகளுக்காகப் பிரபல மூத்த எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் பிரதம நடுவராகக் கடமையாற்றியிருந்தார்.
நவம்பர் 2022 ஆம் ஆண்டு திண்ணை இதழில் வெளிவந்த எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் எழுதிய ‘தாயகக் கனவுடன்’ என்ற ஈழவிடுதலைப் போராட்டம் சார்ந்த சிறுகதை அம்மாதம் வெளிவந்த 69 சிறுகதைகளில் சிறந்த கதையாகத் தெரிவாகியிருந்தது. இத்தொகுப்பில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களது சிறுகதையும் இடம் பெற்றிருக்கின்றது.
‘இலங்கை நகரில் நடந்த இனப்படுகொலையையும், யுத்தம் என்ற பெயரில் தமிழர்கள் சூறையாடப்பட்டதையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கதாசிரியரின் பார்வையில் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் இன, மான உணர்வு அதிமிருக்கலாம் என்கிறார். மேலும் ‘யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும், பெண் போராளி பிரியாவின் நிலை என்ன?’ என்று உணர்வு பூர்வமாக எழுதுகின்றார்.’ என்று நடுவர்களில் ஒருவரான எழுத்தாளர் சுரேஸ் ராஜகோபால் இச்சிறுகதை பற்றித் தனது கருத்தை முன்வைத்திருக்கின்றார்.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIlb3CV67H2uw-feS-muUJN2qc4zrqsRw5GP7FPmAfWTAphpJOinQ-3M9dOHill_ABOB6TeFvrtSkvG5yHrLeW-LcKCyAaneR606p2KaKPdw1I2_fThtzn36TuBadHDJovchPfgBF0sO-ZPZIBc93gdPeIftVCvj28JUddYgAjdPUDx_wbY1UKHP9hF01B/s2141/Kuru-Sivasangari-2-June%2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="2049" data-original-width="2141" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIlb3CV67H2uw-feS-muUJN2qc4zrqsRw5GP7FPmAfWTAphpJOinQ-3M9dOHill_ABOB6TeFvrtSkvG5yHrLeW-LcKCyAaneR606p2KaKPdw1I2_fThtzn36TuBadHDJovchPfgBF0sO-ZPZIBc93gdPeIftVCvj28JUddYgAjdPUDx_wbY1UKHP9hF01B/s320/Kuru-Sivasangari-2-June%2023.jpg"/></a></div>
சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்தில் இருந்து ஒரு வெளியேற்றம்,’ சியாமளா கோபு எழுதிய ‘ஊமைச்சாமி,’ ஜிப்ரி ஹாசன் எழுதிய ‘ஒத்திகைக்கான இடம்,’ கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுதிய ‘அனாதை மரங்கள்,’ குரு அரவிந்தன் எழுதிய ‘தாயகக் கனவுடன்,’ ஆர்னிகா நாசர் எழுதிய ‘சாமி போட்ட பணம்,’ இரா. சசிகலாதேவி எழுதிய ‘பிரம்ம சாமுண்டீஸ்வரி,’ சாந்தன் எழுதிய ‘பாட்டுவெயில்,’ சோ.சுப்புராஜ் எழுதிய ‘தாவரங்களுடன் உரையாடுபவன்,’ ஜார்ஜ் ஜோசப் எழுதிய ‘மங்க்கி கேட்ச்,’ மா காமுதுரை எழுதிய ‘ஒரு துளி நெருப்புக்கக் காத்திருக்கும் யாக குண்டங்கள்,’ அரவிந்தன் எழுதிய ‘விருது’ ஆகிய 12 சிறுகதைகள் 137 பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
‘இச் சிறுகதைத் தொகுப்பில் தேர்வாகி இருக்கும் 12 கதைகளும் ஒரே மாதிரியான கருத்துக்களை உள்ளடக்காமல், ஒன்றில் இருந்து மற்றொன்று கரு, சூழல், நடை என்று அனைத்திலும் மாறுபட்டு இருப்பது கவனிக்கத்தக்கது. வட்டார வழக்கு, ஈழத்தமிழ், மனோதத்துவ ரீதியிலான அணுகுமுறை, புதுப்புது கதை களங்கள் என்று பல சிறப்புக்களை இந்தக் கதைகளில் காணமுடிகின்றது’ என்று எழுத்தாளர் சிவசங்கரி தனது முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-64886984667968417782023-10-21T19:50:00.000-07:002023-10-21T19:50:02.122-07:00Mahajanacollege - கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா
<b>கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023</b>
குரு அரவிந்தன்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg01Td1FU1BlD-Z2U2h3H3C6iV3l5sqZ3l3V15EjjUzC1c0QeaArvT4nbUo2z7ClXDcmOac2ApErU0iCsnI3Y2DwTKMEBZMGN1KS0nrTtCQ9gJqoXfba1ZnJe2FPbJMSR7PwS1fvFHQ6elhiWo_9gO0u2O3h2ZvQ4yf9Ic6j7WJGr9xJ7GQ-xOXTiaYBkHm/s4032/2023-09-24%2022.10.33.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="2268" data-original-width="4032" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg01Td1FU1BlD-Z2U2h3H3C6iV3l5sqZ3l3V15EjjUzC1c0QeaArvT4nbUo2z7ClXDcmOac2ApErU0iCsnI3Y2DwTKMEBZMGN1KS0nrTtCQ9gJqoXfba1ZnJe2FPbJMSR7PwS1fvFHQ6elhiWo_9gO0u2O3h2ZvQ4yf9Ic6j7WJGr9xJ7GQ-xOXTiaYBkHm/s320/2023-09-24%2022.10.33.jpg"/></a></div>
35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக நடந்தேறியது.
திரு. பஞ்சன் பழனிநாதனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த பழையமாணவர் திரு. மகாதேவன் வேலுப்பிள்ளையும் இதில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து கனடா தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரிக்கீதம் ஆகியன இடம் பெற்றன. சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்த பாலஸ்கந்தன், சாந்திநாதன், சசிதரன் மற்றும் மகாஜனன்கள் நினைவுகூரப்பட்டனர். ஆசிரியர் எழுத்தாளர் மயிலங்கூடல் நடராஜன், சங்கீத ஆசிரியை திருமதி நாகம்மா, நாடக ஆசிரியர் கதிரேசம்பிள்ளை ஆகியோரது நினைவாக அரங்கம் இயல், இசை, நாடகம் என்று மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு நிகழ்வுகள் நடந்தன.
பல்லியம், ராகசங்கமம் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து திரு. விஜயசீலன் தியாகராஜாவின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து ‘வானவில்’ திரையிசை நடனத்தைத் தொடர்ந்து சங்கத் தலைவர் திரு. விஜயகுமார் தியாகராஜா அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. தலைமையுரையைத் தொடர்ந்து ‘காலிங்க நர்த்தனம்’ நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. நடன நிகழ்ச்சிக்கு அடுத்ததாக விஜயசீலன் தியாகராஜாவின் நெறியாள்கையில் ‘ஒரு நாய்க்கதை’ என்ற நாடகம் இடம் பெற்றது.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5GvmUEb_dm2DbmdX6mKzdjIBDY8K3mH_wza_AakYMqKyBU4ln8sqABVdad_ULgGPOToizU5VCjW47-wi8i4UZlxTQtjOIU4DwyRRJUMGGd2UHH6SgWG4YXVmZ1IhHL2Tkp1BnrLgNk7syIZweusUulHXI7Q52TcmzH4Sg2O5StBAUTf2n0sqw54XBCNwZ/s4032/2023-09-24%2022.59.00.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="2268" data-original-width="4032" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5GvmUEb_dm2DbmdX6mKzdjIBDY8K3mH_wza_AakYMqKyBU4ln8sqABVdad_ULgGPOToizU5VCjW47-wi8i4UZlxTQtjOIU4DwyRRJUMGGd2UHH6SgWG4YXVmZ1IhHL2Tkp1BnrLgNk7syIZweusUulHXI7Q52TcmzH4Sg2O5StBAUTf2n0sqw54XBCNwZ/s320/2023-09-24%2022.59.00.jpg"/></a></div>
நாடகத்தைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நடன ஆசிரியை திருமதி செந்தில்செல்வி சுரேஸ்வரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘நவீன பரதம்’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘பொன்னரும் சங்கரும்’ என்ற வில்லுப்பாட்டு இடம் பெற்றது. இதில் பல இளையதலைமுறையினர் கலந்து சிறப்பித்தனர்.
அடுத்துக் கவிச்சரம் என்ற ‘கவியரங்க நிகழ்வு’ சத்தியமூர்த்தி மாணிக்கத்தின் தலைமையில் இடம் பெற்றது. அகணி சுரேஸ், பவானி தர்மகுலசிங்கம், இராஜ்மீரா கனி இராசையா, சயந்தன் பசுபதி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். இதைத் தொடர்ந்து ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற இசைக்கச்சேரி நிகழ்வு இடம் பெற்றது. ஈழத்து மெல்லிசை நிகழ்வில் சத்தியமூர்த்தி மாணிக்கம் ‘ஓ..வண்டிக்காரா’ என்ற நீலாவணனின் பாடலைப்பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அடுத்து ஆரணி மகேஸ்வரனின் நடன அமைப்பில் ‘மாங்கல்யம் தந்து’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4RsgEwY8KVmP3LrSEy3xpeBC3Ue7mBCPAXSuZ31Lxo-ctOfnlf7P_TWRJdDdrsOa0RyCr3jsFOd77RW61pGvgL9h1_Cgn6mc3MxXLBmwKuQ0281D7tFBrbyiVbkgebiOURTqmDvKtl9sKP5yFNKBFJoETBgNL2VPT0DDHZQAfh3Hy4xLKfrIavtjWCNPP/s4032/2023-09-24%2018.13.02.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="2268" data-original-width="4032" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4RsgEwY8KVmP3LrSEy3xpeBC3Ue7mBCPAXSuZ31Lxo-ctOfnlf7P_TWRJdDdrsOa0RyCr3jsFOd77RW61pGvgL9h1_Cgn6mc3MxXLBmwKuQ0281D7tFBrbyiVbkgebiOURTqmDvKtl9sKP5yFNKBFJoETBgNL2VPT0DDHZQAfh3Hy4xLKfrIavtjWCNPP/s320/2023-09-24%2018.13.02.jpg"/></a></div>
இதைத் தொடர்ந்து விஜயசீலன் தியாகராஜாவின் நெறியாள்கையில் ‘அஞ்சலி’ என்ற மேடை நாடகம் இடம் பெற்றது. நாடகத்தின் முதற்பகுதி காணெளி வடிவத்திலும், மிகுதிப்பகுதி மேடை நாடகமாகவும் இடம் பெற்றிருந்தது. மல்வேன் பூங்காவில் உள்ள அதிபர் பொ.கனகசபாதி நினைவுப்பூங்காவில் அவரை நினைவுகூரும் வகையில் முற்பகுதி அங்கு படமாக்கப்பட்டிருந்தது. சாந்திநாதனுடன் இணைந்து இது போன்ற பல நிகழ்வுகளில் பணியாற்றியதால், நெறியாளர் விஜயசீலன் மற்றும் குழுவினரின் கடின உழைப்பை இந்த மேடையில் காணமுடிந்தது, பங்குபற்றிச் சிறப்பாக இந்த விழா நிகழ்வைத் தந்த எல்லோருக்கும் எமது பாராட்டுக்கள். இறுதியாக உபசெயலாளர் ரதி சாம்பவலிங்கத்தின் நன்றியுரையுடன் முத்தமிழ் விழா இனிதே நிறைவு பெற்றது.Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-58065450746113054602023-10-21T19:44:00.003-07:002023-10-21T19:44:47.516-07:00Canada - Kalaimantram - 2023
<b>கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா</b>
குரு அரவிந்தன்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6J_V0A59SUVgeQla8KwdMjdTAMl3b9FI0bpyv-exSTOqLZaI4CBOs08rxtiB2ZuC7TSpKkrQLFv-HuqGAWgoZrmLdFhf57NAP-EzUnt7lGgA_Js1ae0gpklnOsWBdBllGSb-ZY_9pkIy5v1UV9Fpp0CPFK9BmkcsvYdwGgd-9FWvjEwn2xo_uFy7xaUwD/s1423/Kalaimantram-8-Oct%202023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="720" data-original-width="1423" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6J_V0A59SUVgeQla8KwdMjdTAMl3b9FI0bpyv-exSTOqLZaI4CBOs08rxtiB2ZuC7TSpKkrQLFv-HuqGAWgoZrmLdFhf57NAP-EzUnt7lGgA_Js1ae0gpklnOsWBdBllGSb-ZY_9pkIy5v1UV9Fpp0CPFK9BmkcsvYdwGgd-9FWvjEwn2xo_uFy7xaUwD/s320/Kalaimantram-8-Oct%202023.jpg"/></a></div>
கனடாவில் இயங்கிவரும் கலைமன்றத்தின் 19 வது பட்டமளிப்பு விழா அக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி 2023 ஆண்டு காலை 10 மணியளவில் ஆரம்பித்து ரொறன்ரோவில் உள்ள யோர்க்வூட் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. கோவிட் பெரும்தொற்றுக் காரணமாகக் கலைமன்றத்தின் பட்டமளிப்பு நிகழ்வு கடந்த சில வருடங்கள் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. மீண்டும் இம்மாதம் நடந்த இந்த நிகழ்வுக்குக் கனடா தமிழர் தகவல் இதழ் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.
எம் மொழி அழிந்து விட்டால், எம்மினமும் அழிந்து விடும் என்பது யாவரும் அறிந்ததே! புலம்பெயர்ந்த மண்ணில் எமது மொழி நிலைத்திருக்க வேண்டுமானால், எமது பண்பாடு கலாச்சாரமும் இந்த மண்ணில் நிலைத்திருக்க வேண்டும். எமக்கான அடையாளங்களை நாம் காப்பாற்றாவிட்டால், புகுந்த மண்ணில் முகவரி அற்றவர்களாக ஆக்கப்பட்டு விடுவோம். எனவேதான் இதைச் சிந்தனையில் கொண்டு, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையினரை உருவாக்குவதில் கனடா கலைமன்றம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibUnOW6r0rsnBFrjTZjv6C1xeK1lyCr1PJa1JeoOu6_Z6l_VK5RKsK34tM7FRYGzAa_6PTLHY6sT9SJdsdc8eS34behdZ2RS9Wz_hFUAAmJPeSLKlwQ4PqL7wCRZBjgEme560mwPuvLUbuHHyn2R05t7j1XT3nmt0OqelCG6cb25DEnjsE7_7KDqRvTwRA/s1508/Kalaimantram-7-Oct2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="797" data-original-width="1508" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibUnOW6r0rsnBFrjTZjv6C1xeK1lyCr1PJa1JeoOu6_Z6l_VK5RKsK34tM7FRYGzAa_6PTLHY6sT9SJdsdc8eS34behdZ2RS9Wz_hFUAAmJPeSLKlwQ4PqL7wCRZBjgEme560mwPuvLUbuHHyn2R05t7j1XT3nmt0OqelCG6cb25DEnjsE7_7KDqRvTwRA/s320/Kalaimantram-7-Oct2023.jpg"/></a></div>
தமிழ் மக்களின் பாரம்பரிய கலையான பரதத்தைப் பலம்பெயர்ந்த இந்தக் கனடிய மண்ணில் அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு, 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா கலைமன்றத்தின் நிறுவுனராகவும், இயக்குனராகவும், அதிபராகவும் சிறிமதி நிறைஞ்சனா சந்துரு அவர்கள் பணியாற்றுகிறார்கள். இதுவரை கனடா கலைமன்றத்தில் இருந்து எமது பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் 66 நிருத்த நிறைஞர்களும், 44 டிப்ளோமா பட்டம் பெற்ற ஆசிரியர்களும் இதற்கான தகுந்த பயிற்சி பெற்றதன் மூலம் உருவாக்கப் பட்டிருக்கின்றார்கள். புலம்பெயர்ந்த மண்ணில் இது பெரியதொரு சாதனை என்றே எண்ணத்தோன்றுகின்றது.
இந்த மன்றத்தின் இன்னுமொரு இயக்குனரான கனடாவில் பிறந்து வளர்ந்த செல்வி ஐஸ்வரியா சந்துரு அவர்கள் பல்கலை விற்பன்னராக இருக்கின்றார். பரதநாட்டியத்தில் மட்டுமல்ல, இசைத்துறையிலும் சிறந்து விளங்குகின்றார். கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு, மற்றும் வீணை, வயலின் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமையாகச் செயற்படுகின்றார். சினிமாத்துறையில் இசையமைப்பாளர் டி. இமாமின் இசையமைப்பில் ‘வணங்காமுடி’ என்ற படத்தில் ‘அம்சவல்லி’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் பலராலும் பாராட்டப் பட்டிருக்கின்றார். தான் அறிந்தவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கற்பிப்பதிலும் மிகவும் ஆர்வமாகச் செயற்படுகின்றார்.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3ozk1qFO5Pm8BHndUxKS05xwllWuzb5gt_cETAGUy6jy5cz9FOy8NN0nd1SGCo8Du8kOqsPMywcaJkiOHel5Xk96TCh9qKiPHKCsdCv-W4X2Ee3ZIapqq5F9zKGAZQcXBH7Nx7XKhdEQCbea28ck79vSuyZi1RyvnM-lg7xeRmQ0Jpre3ZcJRZAAVeEnr/s1332/Kalaimantram-5-Oct%202023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="834" data-original-width="1332" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3ozk1qFO5Pm8BHndUxKS05xwllWuzb5gt_cETAGUy6jy5cz9FOy8NN0nd1SGCo8Du8kOqsPMywcaJkiOHel5Xk96TCh9qKiPHKCsdCv-W4X2Ee3ZIapqq5F9zKGAZQcXBH7Nx7XKhdEQCbea28ck79vSuyZi1RyvnM-lg7xeRmQ0Jpre3ZcJRZAAVeEnr/s320/Kalaimantram-5-Oct%202023.jpg"/></a></div>
கனடா நாடு பல்கலாச்சார நாடாக இருப்பது மட்டுமல்ல, எங்கள் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மதத்தைப் பேணிக்காக்க உதவும் நாடாகவும் இருக்கின்றது. இத்துறையில் ஈடுபாடு கொண்ட 2022 ஆம் அ+ண்டு ‘நிருத்த நிறைஞர்’ பட்டடம் பெற்ற செல்வி நிலக்ஸா பிரகாஸ் மேடையில் கௌரவிக்கப்பட்டார். இவருடன் நடன ஆசிரியருக்கான டிப்ளோமா பட்டம் பெற்ற செல்வி பூமிகா புவிதரன், செல்வி லக்ஸயா வேணுகோபாலன், செல்வி அராபி ஜெயச்சந்திரன், செல்வி தக்ஸா பாலநாதன், செல்வி பிரியங்கா சக்ரபோதி, செல்வி லாவன்யா ஜோஸி, செல்வி கர்மின்ஜொட் மினாஸ், செல்வி கேதாயினி சிவகுமாரன், செல்வி சிறிஸதி சீஹல், செல்வி பிரித்திகா கமலேசன், செல்வி சுபிக்ஸா மணிவண்ணன் ஆகியோரும் சான்றிதழ்களும், விருதுகளும் கொடுக்கப்பட்டு, மேடையில் கௌரவிக்கப்பட்டனர். எமது பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினரும் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் தொடருவதற்கு வழியமைத்த ஒரு சிறந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது.
Series NavigationKuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-28479415995730754152023-10-21T19:39:00.003-07:002023-10-21T19:50:42.532-07:00 ஓவியர் இரங்கநாதன் - மாருதி
<b>ஓவியர் மாருதி என்ற இரங்கநாதன் மறைந்தார்</b>
குரு அரவிந்தன்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSoRHMcqAmVHl7Jw9L9AuqTwe1b60arqUpJEKKFFV7p3WM92RTB05RhdR25GMgAJ9Ehlhdp9sbCenrA_wqK-BB40AXS8SJulZKeXBQr8ycEm9aQmGFNoDdKi2XHhsKy928deQLPWxiibZCg3XmKFk3rLwDLSoWZuitF60BbowsGLcAKRlrwrwilbDQfEDG/s371/Artist-Maruthi-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" height="320" data-original-height="371" data-original-width="334" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSoRHMcqAmVHl7Jw9L9AuqTwe1b60arqUpJEKKFFV7p3WM92RTB05RhdR25GMgAJ9Ehlhdp9sbCenrA_wqK-BB40AXS8SJulZKeXBQr8ycEm9aQmGFNoDdKi2XHhsKy928deQLPWxiibZCg3XmKFk3rLwDLSoWZuitF60BbowsGLcAKRlrwrwilbDQfEDG/s320/Artist-Maruthi-2023.jpg"/></a></div>
மாருதி என்ற புனைப்பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர் இரங்கநாதன் சென்ற 27 ஆம் திகதி யூலை மாதம் தனது 85 வது வயதில் புணே நகரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மராத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த விமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தீவிர இலக்கிய ஆர்வலர்கள் எப்படி ஒரு எழுத்தாளனின் படைப்பை நினைவில் வைத்திருப்பார்களோ, அதே போல அந்தப் படைப்புக்கு உயிரூட்டிய ஓவியனையும் கட்டாயம் நினைவில் வைத்திருப்பார்கள்.
பிரபல இதழ்களுக்கு ஓவியம் வரைந்த மாருதியின் முதலாவது ஓவியம் குமுதம் இதழில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்தது. மாணவப் பருவத்தில் தமிழக நூல்களை வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டதால், அதில் வரும் கதைகளுக்கு வரையப்படும் ஓவியங்களைப் பார்த்து நான் வியப்பதுண்டு. நானே ஒரு கதை எழுதி அதற்கு ஓவியர் மாருதி, ஓவியர் ஜெயராஜ் போன்றவர்கள் படம் வரைந்தால் எப்படி இருக்கும் என்று சில சமயங்களில் கற்பனை செய்து கனவுகூடக் கண்டிருக்கின்றேன். ஆனால் எதிர்பாராமல் அந்தக் கனவு ஒருநாள் நினைவாகிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_iW0R0AYn3blUXFvGrNVGydF2a0Dd1F-0eM0XnMmlYqJhTmU9KphkPHv9jXMT4CUdyYhit7at5HfBQZDuE2QwkdVVbStfjFkqkuXYPLxHicq_3POAYJ0hMVOpD2EE72klt8YdhnFl39Y_FTxDI1SDOfVex49YZdavUU1UEveNX-yzDBMSssm4PtrIHWyy/s3232/Vikatan-Rosakaari-July%202023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="2633" data-original-width="3232" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_iW0R0AYn3blUXFvGrNVGydF2a0Dd1F-0eM0XnMmlYqJhTmU9KphkPHv9jXMT4CUdyYhit7at5HfBQZDuE2QwkdVVbStfjFkqkuXYPLxHicq_3POAYJ0hMVOpD2EE72klt8YdhnFl39Y_FTxDI1SDOfVex49YZdavUU1UEveNX-yzDBMSssm4PtrIHWyy/s320/Vikatan-Rosakaari-July%202023.jpg"/></a></div>
விகடன் பவழவிழா கொண்டாட்டத்தின் போது, ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ என்ற எனது குறுநாவல் தெரிவாகிப் பரிசு பெற்ற போது, ஓவியர் மாருதி, ஜெயராஜ், ராமு, அர்ஸ், பாண்டியன் ஆகிய ஐந்து ஓவியர்களும் அந்தக் கதைக்கு ஓவியம் வரைந்ததன் மூலம் என்னை ஆச்சரியப் படுத்தியிருந்தனர். அப்பொழுது விகடன் ஆசிரியராக இருந்த வியெஸ்வி மூலம் தான் எனது கனவு நினைவானது, அதன் பின் அவர் மூலம்தான் எனக்கு ஓவியர் மாருதியின் அறிமுகம் கிடைத்தது. ஆனந்தவிகடனில் வெளிவந்த எனது கதைகளில் அனேகமான கதைகளுக்கு ஓவியர் மாருதியே ஓவியம் வரைந்திருந்தார். கற்பனைக் கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, அந்தப் பாத்திரங்களை வாசகர்கள் மனதில் இடம்பிடிக்க வைத்ததில் ஓவியர்களுக்கும் முக்கிய பங்குண்டு என்றால் மிகையாகாது.
கதையில் வரும் பாத்திரங்களின் முகபாவனையை அப்படியே எடுத்துக் காட்டுவதில் இவரது ஓவியங்கள் சிறப்பானவை. குறிப்பாகப் பெண் பாத்திரங்களை அப்படியே மனதில் நிலை நிறுத்தி விடக் கூடியது இவர் வரையும் பெண்களின் ஓவியங்கள். குறிப்பாக விகடனில் வெளிவந்த ‘சார் ஐ லவ்யூ’ என்ற எனது கதையின் இளம் கதாநாயகியையோ, நீர்மூழ்கி நீரில் மூழ்கி கதையில் வந்த கதாநாயகியையோ, அல்லது ரோசக்காரியில் வந்த சுபத்ரா என்ற பாத்திரத்தையோ மறக்க முடியாதவாறு ஓவியம் வரைந்திருந்தார். ரோசக்காரியில் தானே சுபத்ரா என்ற பாத்திரத்தோடு பூங்காவில் உட்காரந்து உரையாடுவது போல அவரது ஓவியம் வித்தியாமான கோணத்தில் அமைந்திருந்ததால் பலரின் பாராட்டையும் அப்போது பெற்றிருந்தார். ‘பாட்டிற்கு இசை என்றால் கதைக்கு ஓவியம்!’
‘ஓவியக் கலைமாமணி’ என்ற விருது பெற்ற, ஓவியர் மாருதி உயிரூட்டிய எனது சில கதாபாத்திரங்களின் படங்களை இங்கே தருகின்றேன். நேற்றிருந்தார் இன்றில்லை என்பதற்கிணங்க, அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களது துயரத்தில் நாங்களும் கலந்து கொள்கின்றோம். ஓம் சாந்தி!Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-82330987968195953782023-10-21T18:52:00.001-07:002023-10-21T18:52:19.100-07:00Halloween in Canada -Oct 2023
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdRXEcJsf0svAPz56Q-bZVcSJKQwf-tcayncRum2NEHF0R_aW9FjuvSnPx9nBbc8dR7K9VX58gZuLkdClxCV5PirYMxhuyT5_3c_xqdElqdhNKQpHszUCX8gje4rdpoIqMb8YR1YXaB5qCe27f9erhjKELDaTwKS5j_QEpRoz__BpSnoztMy4OX99FBD_M/s1072/Eela-Halloween-22-10-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="853" data-original-width="1072" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdRXEcJsf0svAPz56Q-bZVcSJKQwf-tcayncRum2NEHF0R_aW9FjuvSnPx9nBbc8dR7K9VX58gZuLkdClxCV5PirYMxhuyT5_3c_xqdElqdhNKQpHszUCX8gje4rdpoIqMb8YR1YXaB5qCe27f9erhjKELDaTwKS5j_QEpRoz__BpSnoztMy4OX99FBD_M/s320/Eela-Halloween-22-10-2023.jpg"/></a></div>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-51849706646018163812023-10-20T19:21:00.001-07:002023-10-20T19:21:47.987-07:00Book- சிறுகதைத் தொகுப்பு
<b>ரொறன்ரோவில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு</b>
சுலோச்சனா அருண்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-W2ZaTZn0NhKysvOsmbamgu3EatewmYNgWdutLseWQuaHRDcbywYoeToI4Oy-6ypWiWyu9emxWl7s8FDfYTjl78uOo7VMssR8oP1qi6VNcc_PozFbbdhTNwlKzsK56rvvnoppvn1kv7A5bOxZaMWToGwLPjP1FCZRiw2P3MX9L2ujTKLd1IKRmgL_Xg2L/s2969/Kuru-Bookrelease-5-Jly2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" height="320" data-original-height="2969" data-original-width="2865" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-W2ZaTZn0NhKysvOsmbamgu3EatewmYNgWdutLseWQuaHRDcbywYoeToI4Oy-6ypWiWyu9emxWl7s8FDfYTjl78uOo7VMssR8oP1qi6VNcc_PozFbbdhTNwlKzsK56rvvnoppvn1kv7A5bOxZaMWToGwLPjP1FCZRiw2P3MX9L2ujTKLd1IKRmgL_Xg2L/s320/Kuru-Bookrelease-5-Jly2023.jpg"/></a></div>
சென்ற சனிக்கிழமை 22-7-2023 கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘சாக்லாட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழில் எழுதப்பட்ட வெளிநாட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனின் ‘பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டன. கலை, இலக்கிய ஆர்வலர்கள் பலர் மண்டபம் நிறைந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஐ. எம். எச். ஓ தலைவரும், வைத்திய கலாநிதியுமான வரகுணன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். முதலில் மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசியகீதம், அகவணக்கம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலரும், மாணவ தன்னார்வத் தொண்டர் சிலரும் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வின் போது செல்வி திவாணி நாராயணமூர்த்தி அவர்களால் நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. வெளிநாட்டுச் சிறுகதைகள் முதற்பிரதியைப் பட்டயக்கணக்காளர் திரு. ஆனந்தராசா அவர்களும் ‘பறவைகள்’ சிறுகதைத் தொகுப்பின் முதற்பிரதியைப் பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி வரகுணனும் பெற்றுக் கொன்டனர். சிறப்புப் பிரதிகளை வைத்திய கலாநிதி மோகன், வைத்திய கலாநிதி பிரசாந்தன், திருமதி சத்தியவான் தனுசா இராஜதுரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து எழுத்தாளர் குரு அரவிந்தன் ஏற்புரை வழங்கினார்.
கனடாவில் பிறந்து வளர்ந்த சுமார் நாற்பது இளைய தலைமுறையினர் இந்த நிகழ்வின் போது, தமிழில் உரையாடிச் சிறுவர் நாட்டிய நாடகம் ஒன்றை நடித்துக் காட்டி, நடனமாடி அனைவரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டனர். இதைவிட வீணை இசை, நடனம், பாடல்கள், பயனுள்ள உரைகள் போன்ற கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. மன்றத்தலைவர் யாழினி விஜயகுமாரின் உரையைத் தொடர்ந்து பிரதமவிருந்தினர் உரை இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் போது குரு அரவிந்தன் அவர்களின் நூல்கள் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினால்’ விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அரைமணி நேரத்தில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 212 தமிழ் நூல்கள் விற்பனையாகி விற்பனையில் கனடாவில் ஒரு சாதனை படைத்திருந்தது. இந்த விற்பனையில் சேகரித்த பணம் முழுவதும் இலங்கையில் உள்ள தமிழ் உறவுகளின் சுகாதார, வைத்திய தேவைகளுக்காக ஐ.எம்.எச்.ஓ (ஐவெநசயெவழையெட ஆநனiஉயட ர்நயடவா ழுசபயnணையவழைn) நிறுவனத்தினரிடம் சொப்கா குடும்பமன்றத்தால் அன்பளிப்பாகக் கையளிக்கப்பட்டது. செயலாளரின் நன்றி உரையைத் தொடர்ந்து இரவு உணவு வழங்கப்பட்டு, நிகழ்வு சிறப்பாக முடிவுற்றது.
Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-14171169412378165942023-10-20T19:14:00.004-07:002023-10-20T19:14:47.165-07:00
<b>தேசிய புத்தகநாள் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.</b>
சுலோச்சனா அருண்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgafGgZh0zgLYZ1xHWWPKi-TuTbVXTkvKmCCkvYWPgY5wybFtSD2Iy2BQhVIfeTxDwjUrimciMKewjURUzF92YDTFNc_avf9cGIqmVB6AZcyg6tUT7ibfRQltUvEvL06N3HbvsljW4DFNEWisrQ6XT6tIPX-nXtO6A8r2aFjGdNmZuK402C65kpOMfMtcmn/s3209/Book%20Release%20India-9-8-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="1669" data-original-width="3209" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgafGgZh0zgLYZ1xHWWPKi-TuTbVXTkvKmCCkvYWPgY5wybFtSD2Iy2BQhVIfeTxDwjUrimciMKewjURUzF92YDTFNc_avf9cGIqmVB6AZcyg6tUT7ibfRQltUvEvL06N3HbvsljW4DFNEWisrQ6XT6tIPX-nXtO6A8r2aFjGdNmZuK402C65kpOMfMtcmn/s320/Book%20Release%20India-9-8-2023.jpg"/></a></div>
ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 2023 தேசிய புத்தகவிரும்பிகள் தினத்தை (யேவழையெட டீழழம டுழஎநச’ள னுயல) முன்னிட்டுக் கனடாவில் உள்ள ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ சர்வதேச ரீதியாகப் புத்தகம் வாசிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். புத்தகம் வாசிக்கும் தினத்தை முன்னிட்டு நிகழ்வில் பங்குபற்றிய அதன் அங்கத்தவர்கள் புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். தமிழ்நாடு, இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற இடங்களில் உள்ள வாசகர் வட்டத்தினரிடம் இந்த வாசிப்பு நிகழ்வு பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தனின் நூல்கள் பற்றிய சர்வதேச எழுத்தாளர்கள் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூலைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான மு.முருகேஷ் அவர்கள் ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருந்தார். சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், ஒலிப்புத்தகங்கள், பயணக்கட்டுரைகள், மேடைநாடகம், திரைக்கதை வசனம் போன்ற குரு அரவிந்தனின் ஆக்கங்கள் பற்றிய திறனாய்வுகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
இளம் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டு போவதால் அதை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி சர்வதேச ரீதியாக வாசகர் வட்டத்தினரிடம் முன்னெடுக்கப்பட்டது. தொலைக்காட்சியிலும், செல்போனிலும், முகநூலிலும் முழுநேரமும் மூழ்கிப் போய் இருப்பவர்களைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு இந்த நிகழ்வு அறிமுகமானது. பல அங்கத்தவர்கள் விருப்போடு இந்த நிகழ்வில் பங்கு பற்றியிருந்தார்கள். வாசகர் வட்டத்தினருக்கு இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்காகக் கனடாவில் இருந்து எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
‘தமிழ் ஆரம்’ சிறுவர் நூலில் சிறுவர் பாடல்களைப் படித்துப் பார்த்தது மட்டுமல்ல, ஆர்வமிகுதியல் சில பாடல்களைப் பாடமாக்கியும் வைத்திருக்கின்றேன். ‘குவாகுவா வாத்து எங்கு போனாய் நேற்று’ என்ற பாட்டையும், ‘எங்க வீட்டுத் தோட்டத்தில் சின்னச் சின்னச் செடிகளில்’ என்ற பாடலையும் உடனே பாடமாக்கிவிட்டேன் என்று சிந்துஜா என்ற சிறுமி மகிழ்ச்சியோடு சொன்னார். இன்னுமொரு வாசகர் வட்ட அங்கத்தவரான சிவசுதன் புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடும் போது, ‘புத்தகங்கள் நல்ல நண்பன் போலப் பொதுஅறிவைப் பெற்றிட உதவியாக இருப்பது மட்டுமல்ல, என்னை எழுதவும் தூண்டுகின்றன’ என்று குறிப்பிட்டார். ‘குரு அரவிந்தன் அவர்களின் பயணக் கட்டுரைகளை வாசிக்கும் போது வரலாறு சார்ந்த பல விடயங்களை அறிந்து கொண்டதுடன், நானும் அவருடன் பயணம் செய்தது போன்ற உணர்வையும் பெற்றேன்’ என்று கனடிய வாசகரான கந்தவேள் என்பவர் குறிப்பிட்டார்.
இம்முறை பரீட்சார்த்த நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியதால், இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, அடுத்த வருடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வமுள்ள சில பாடசாலைகளிலும், நூலகங்களிலும் இதுபோன்ற நிகழ்வை முன்னெடுக்க குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினர் முடிவெடுத்திருக்கின்றனர்.
Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-79160303299754242262023-10-20T19:11:00.001-07:002023-10-20T19:11:07.312-07:00Halloween
<b>கனடாவில் கிழக்கும் மேற்கும் இணைந்த இம்மாத நிகழ்வுகள்</b>
குரு அரவிந்தன்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFL0BNSc51W9KvqIcBExE6g_O1bNXUyhVfKBEJujT-0APSygvFgIxleP7jsMm5aqgPgWHOwXZEw7PMENSb2M43NN3lsGu5Tkwf7ZtCDxDYN9y0uxELR5IRsLF8wHWonamaKz2N0xhwn5cUVGo1733zK4osVafIxoapjboI6JmqPj_wRZhyoeBq5Sc23ril/s2991/Haloween-4-oct20.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="1905" data-original-width="2991" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFL0BNSc51W9KvqIcBExE6g_O1bNXUyhVfKBEJujT-0APSygvFgIxleP7jsMm5aqgPgWHOwXZEw7PMENSb2M43NN3lsGu5Tkwf7ZtCDxDYN9y0uxELR5IRsLF8wHWonamaKz2N0xhwn5cUVGo1733zK4osVafIxoapjboI6JmqPj_wRZhyoeBq5Sc23ril/s320/Haloween-4-oct20.jpg"/></a></div>
இந்த மாதம் கனடாவில் வழமைபோல வித்தியாசமான இரண்டு நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. அவை என்னவென்று நீங்கள் யோசிக்கலாம், ஒன்று 15 ஆம் திகதி ஆரம்பமான நவராத்திரி விழா, மற்றது கலோவீன் விழா. தமிழர்கள் அதிக அளவில் கனடா நாட்டிற்குப் புலம் பெயர்ந்ததால், அவர்களில் இந்துக்கள் தங்கள் பாரம்பரிய கொண்டாட்டமான நவராத்திரி விழாவை தாங்கள் வாழும் பகுதிகளில் விமர்சையாகக் கொண்டாடுகின்றார்கள். தொடக்கத்தில் வேலைவாய்ப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் அவதிப்பட்டாலும், கடந்த 40 வருடங்களாக அவர்களது கடின உழைப்பு அவர்களைப் பொருளாதார ரீதியாக ஓரளவு முன்னேற வைத்திருக்கின்றது. தமிழ் இனத்தின் புதிய தலைமுறை ஒன்றும் இங்கே உருவாக்கப்பட்டு அவர்களும் கல்விகற்று, மொழியை மறக்காது நல்ல நிலையில் இருப்பது பெருமைப்பட வேண்டிய விடயமே.
அதே சமயம் மேற்கத்திய கொண்டாட்டமான கலோவீன் கொண்டாட்டமும் இம்மாதம் 31 ஆம் திகதி தமிழர்கள் மத்தியில் விமர்சையாக இங்கே இடம்பெற இருக்கின்றது. பல்கலாச்சார நிகழ்வுகளையும் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு, ஐரிஸ் மக்கள் 19 ஆம் நூற்றாண்டில் கனடாவில் அறிமுகம் செய்து வைத்த கலோவீன் போன்ற நிகழ்வுகளிலும் ஏனைய இன மக்களுடன் இணைந்து பங்குபற்றிக் கொண்டாடுகின்றார்கள். நவராத்திரியைக் கொண்டாட வணக்கத்திற்குரிய பொம்மை வடிவங்கள் வீட்டின் உள்ளே உள்ள கொலுவிலும், அதேபோல 31 ஆம் திகதி கலோவீனைக் கொண்டாட வீட்டு வாசலில் பூசணிக்காய், சிலந்தி, ஒளவால், எலும்புக்கூடுகள், கறுப்புப்பூனை, போய், பிசாசு என்று உருவப் பொம்மைகள் அடங்கிய கொலு வைக்கப்பட்டிருப்பதையும் சில தமிழர் வீடுகளில் காணமுடிந்தது.
முதலில் கலோவீன் நிகழ்வு பற்றிப் பார்ப்போம். கோவிட் பெரும் தொற்றுக் காரணமாக கடந்த சில வருடங்களாகக் கலோவீன் நிகழ்வுகள் பெரிய அளவில் இங்கு இடம் பெறவில்லை. பிறந்த மண்ணில் இருக்கும் போது, எப்படி பேய், பிசாசு, கொள்ளிவால் பிசாசு, முனி என்றெல்லாம் சொல்லிப் பெரியவர்கள் எங்களுக்குப் பயம் காட்டினார்களோ, அதே போன்ற நம்பிக்கை உள்ளவர்கள் இங்கேயும் இருக்கின்றார்கள். வாசலில் உள்ள கொலுவைப் பார்க்கும் போது ‘கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்’ என்று மாணிக்கவாசக சுவாமிகள் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. இவர்களுடைய பலவீனத்தை வர்த்தகர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அதற்கு ஏற்றமாதிரிப் பொருட்களைத் தயாரித்து விற்பனைக்கு விட்டிருக்கிறார்கள்.
கலோவீன் தினத்தன்று சிறிய பிள்ளைகள் மட்டுமன்றி பெரிய பிள்ளைகளும் அயலில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவைத் தட்டிச் சாக்லட் வாங்குவது வேடிக்கையாக இருக்கும். இதில் இன்னுமொரு விடயம் என்ன வென்றால் தங்களுடைய நெருங்கிய ஆண், பெண் சினேகிதர்களுடன் இரவில் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதற்கும் இத்தினத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். பாடசாலைகளில் அந்த வாரம் இதைப்பற்றிக் கதைகள் சொல்வது, ஓவியங்கள் வரைவது, முகமூடி போன்றவற்றைச் செய்வது, கலோவீன் சொல்தேடும் பயிற்சிகள் செய்வது போன்ற நிகழ்வுகளும் இடம் பெறும்.
இங்கே கோயில்களிலும், கல்வி மற்றும் கலையகங்களிலும் சிறப்பாக நவராத்திரி விழாவைக் கொண்டாடுகின்றார்கள். இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் தினமும் இடம் பெறுகின்றன. ரொறன்ரோ கல்விச் சபையில் உள்ள எனது மாணவர்கள் இங்கே பிறந்த தலைமுறையினர் என்பதால், தாயகத்தில் எப்படி நவராத்திரி விழாவை நாங்கள் கொண்டாடினோம் என்ற கதைகளையும் எனது வகுப்பில் சொல்வதுண்டு. இங்கே பொதுப் பாடசாலைகளில் சமயக் கல்வி கற்பிக்க முடியாது என்பதால், அறிவியல் சார்ந்து இங்குள்ள மாணவர்கள் இருப்பதால், அதற்கேற்ற மாதிரி அவர்களுக்கு விளக்கங்களும் கொடுத்தால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-85725284614903048672023-07-15T19:39:00.005-07:002023-07-15T19:43:21.445-07:00Mahajana College Canada OSA - Get together -2023
மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்
குரு அரவிந்தன்
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggebxomTCWmtjL0FgdZfjdj_EwwkFk4DeqQA5TeIS035ElHumX3zV9C4XADlRoL4LlKTVS-pkUBV6nK1-lz9HFqrvyqMj4EeFDzlmX17bjZrfSWT2nT-Z3ZGs6LuBI2DfaYyWnJUkjQwd4fXgyZibDHvY1WVm3aef15X66Ome9n_4XMl38Ae_2whXg67hx/s904/Maha-Get%20together-Jun%202023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; clear: left; float: left;"><img alt="" border="0" width="320" data-original-height="613" data-original-width="904" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggebxomTCWmtjL0FgdZfjdj_EwwkFk4DeqQA5TeIS035ElHumX3zV9C4XADlRoL4LlKTVS-pkUBV6nK1-lz9HFqrvyqMj4EeFDzlmX17bjZrfSWT2nT-Z3ZGs6LuBI2DfaYyWnJUkjQwd4fXgyZibDHvY1WVm3aef15X66Ome9n_4XMl38Ae_2whXg67hx/s320/Maha-Get%20together-
Jun%202023.jpg"/></a></div>
மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியும், நிறுவுனர் நினைவு தினமும் சென்ற சனிக்கிழமை 24 – 6 - 2023 ஸ்காபரோ மக்கோவான் வீதியில் உள்ள மிலிக்கன் பூங்காவில் இடம் பெற்றது. கல்லூரியின் பழைய மாணவர்களான பெற்றோரும் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளுமாகக் குடும்பமாக வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கோவிட் - 19 காரணமாக ஒதுங்கி இருந்தவர்கள் பலரை மீண்டும் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்களைச் சங்கத் தலைவர் திரு. விஜயகுமார் அறிமுகம் செய்து வைத்தார். இப்போது கனடாவில் இருக்கும் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர்களில் மிகவும் மூத்தவரான இவரது 100வது பிறந்த தினத்தையும் கேக் வெட்டி, பாராட்டுக் கவிதைபாடிப் பழைய மாணவர்கள் கொண்டாடினார்கள். 1923 ஆம் ஆண்டு யூன் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியில் பிறந்த இவர் ஆரம்ப கல்வியை அளவெட்டி ஞானோதயா பாடசாலையிலும், அதைத் தொடர்ந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும், உயர்கல்வியை பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார்.
மிகவும் ஞாபகசக்தியோடு அவர் சொன்ன பழைய கதைகளைப் பழைய மாணவர்களும், இளைய தலைமுறையினரும் மிகவும் ஆர்வத்தோடு கேட்டார்கள். பாடசாலையில் தங்கள் காலத்தில் திரு. சின்னப்பா அவர்கள் அதிபராக இருந்ததாகவும், அங்கு அப்போது ஐந்து வகுப்பறைகளும், ஒரு நூலகமும் இருந்ததாகச் சொன்னார். அக்காலத்தில் தாங்கள் வேட்டியும் சால்வைத் துண்டும் அணிந்து மேற்சட்டை இல்லாமல் பாடசாலைக்குச் சென்றதாகவும், மலேசியாவில் இருந்து வந்த ஒரே ஒரு மாணவன் மட்டும் அரைக் காற்சட்டையும், கோட்டும் போட்டுக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
1994 ஆம் ஆண்டு கனடா வந்ததாகவும், தனக்கு உதவிகள் செய்த ஆசிரியர்களான தம்பு மாஸ்டர், சின்னத்துரை மாஸ்டர், காசிப்பிள்ளை மாஸ்டர், சுந்தரம்பிள்ளை மாஸ்டர் ஆகியோரையும் நினைவு கூர்ந்தார்.
பாதுகாப்பு அமைச்சில் பணி புரிந்தபோது டெல்கி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவதற்காகப் புலமைப்பரிசு பெற்று டெல்கி சென்றதாகவும், அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் அழைப்பின் பெயரில் அவருடன் விருந்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். மகாஜனக் கல்லூரியின் வெள்ளிவிழா, பொன்விழா, பவளவிழா, நூற்றாண்டுவிழா எல்லாவற்றிலும் கலந்து கொண்ட பெருமை பிரதம விருந்தினரான இவருக்கு உண்டு.
பிரதம விருந்தினரின் உரையைத் தொடர்ந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. புவனச்சந்திரன் நிறுவுனர் பற்றி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து போசகர் திரு. கதிர் துரைசிங்கம், மற்றும் சிறப்புவிருந்தினர் குரு அரவிந்தன் ஆகியோரும் உரையாற்றினார்கள். மழை காரணமாக இளையோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குக் காலை, மதிய உணவுகள் வழங்கப்பட்டன. செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.
Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-21779678640128548582023-07-15T19:25:00.002-07:002023-07-15T19:25:31.043-07:00Sandilipay Get Together in Canada - 2023
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8A_ocVIqsYyaqTh41W65rbVAHKUEtenKEKE9pubgC2w56SjvEhXCCJosq16B4suq8IU7EhBKpmvccgPr3J5l4-dL9afE57VcbNC8-kz0gC_7Xq9zl6dtru4tle1XitOzchQwrZsO9vgTZPDwwjdJMHMLp7KcXDviLQI1niQ941uOk4abdusP0980zU71o/s1081/Eelanadu-Sandilipay-2023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; clear: left; float: left;"><img alt="" border="0" width="320" data-original-height="799" data-original-width="1081" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8A_ocVIqsYyaqTh41W65rbVAHKUEtenKEKE9pubgC2w56SjvEhXCCJosq16B4suq8IU7EhBKpmvccgPr3J5l4-dL9afE57VcbNC8-kz0gC_7Xq9zl6dtru4tle1XitOzchQwrZsO9vgTZPDwwjdJMHMLp7KcXDviLQI1niQ941uOk4abdusP0980zU71o/s320/Eelanadu-Sandilipay-2023.jpg"/></a></div>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-34277151964383609212023-07-12T18:09:00.001-07:002023-07-12T18:09:25.769-07:00Kuru Aravinthan's Books<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHFNCS0qdqIEPB07FkdO27fNg2v8UMbo0h3bj4uq-eeNG1uqex6PGMLOePBuaPui4JPPtYpUqPvrULi5cxBmHQYNpf5b3a5e2JLxNOfbb3YkO3vGgPNpgt-0RLvtAUMFuQ99AvT9xx4ONqYsSaEzeifH3kKZDO-Q2pnhg8chfwllZwlF5CxPSLXscpCx49/s1537/Nanda-Kuru%20Advt-12-%20Aug%202023.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" height="320" data-original-height="1537" data-original-width="1193" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHFNCS0qdqIEPB07FkdO27fNg2v8UMbo0h3bj4uq-eeNG1uqex6PGMLOePBuaPui4JPPtYpUqPvrULi5cxBmHQYNpf5b3a5e2JLxNOfbb3YkO3vGgPNpgt-0RLvtAUMFuQ99AvT9xx4ONqYsSaEzeifH3kKZDO-Q2pnhg8chfwllZwlF5CxPSLXscpCx49/s320/Nanda-Kuru%20Advt-12-%20Aug%202023.jpg"/></a></div>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-52044830156002262092023-06-27T19:15:00.001-07:002023-06-27T19:21:03.891-07:00Audio Short Story - By Kuru Aravinthan<p> </p><p>AUDIO Short Story </p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZgiuYYFN_6sXRI2hK87RE0sUkw4HnUZOo5ZuH5i9wv1o69HKrpc-HCFOvKPEWG-DADIQwoPQ_wal7EPOkers1ordE8KiykEbKfu9KsuPRzDv52ejg8ihmq4RUYERL7U-eFFTA-zEPhLHKAAgLQ0K8fLuNz79FJYhP4W7-_OXa1XQ6IhlRoyHOMxoyUipT/s988/Siru-%20Audio%20Story-%20June%202023.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="461" data-original-width="988" height="149" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZgiuYYFN_6sXRI2hK87RE0sUkw4HnUZOo5ZuH5i9wv1o69HKrpc-HCFOvKPEWG-DADIQwoPQ_wal7EPOkers1ordE8KiykEbKfu9KsuPRzDv52ejg8ihmq4RUYERL7U-eFFTA-zEPhLHKAAgLQ0K8fLuNz79FJYhP4W7-_OXa1XQ6IhlRoyHOMxoyUipT/s320/Siru-%20Audio%20Story-%20June%202023.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p>By: Kuru Aravinthan</p><p><br /></p><p><a href="https://www.youtube.com/watch?v=KvdJN_smtfw">https://www.youtube.com/watch?v=KvdJN_smtfw</a><br /></p>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-41049835695184177212023-06-27T09:33:00.002-07:002023-06-27T09:33:13.725-07:00Story - Audio - By: Kuru Aravinthan<p> </p><p><br /></p><p>AUDIO STORY - By: Kuru Aravinthan</p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFstjAT37vJ5gVvrUBR98R7lEEpzijqB_qvsLhlwuJFseISMnUe2vBMc9gHtNISeuLfuJgrif1q9-mVkeYeEIHmMFkvSQ6g3zDVANkfKueJEg-Q8jmhVWkhGQQ9zm51GcCqaQUQlRwGdmg0IviBk-Ca5NzVSLfq_UGyvhgzGgWStZjSGA73-KvTch64fzq/s1019/Veedu-%20Betle%20Nuts-2023.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="571" data-original-width="1019" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFstjAT37vJ5gVvrUBR98R7lEEpzijqB_qvsLhlwuJFseISMnUe2vBMc9gHtNISeuLfuJgrif1q9-mVkeYeEIHmMFkvSQ6g3zDVANkfKueJEg-Q8jmhVWkhGQQ9zm51GcCqaQUQlRwGdmg0IviBk-Ca5NzVSLfq_UGyvhgzGgWStZjSGA73-KvTch64fzq/s320/Veedu-%20Betle%20Nuts-2023.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p>https://www.youtube.com/watch?v=cAbLwat3L98</p><p><br /></p><p><a href="https://www.youtube.com/watch?v=cAbLwat3L98">https://www.youtube.com/watch?v=cAbLwat3L98</a><br /></p>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-38969396645112886812023-06-27T09:06:00.001-07:002023-06-27T09:22:13.808-07:00Keniya - Masi Mara - AUDIO<p> MasiMara - Keniya</p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVNOI1iBEYDJFGPFD2HTcjM2xlU2a_jEFJpFe_iG-EPt6ZqVyXm4N4ldkQyAtK7aL_CyHSYjj6_8_8NUFzzDKGFVHSOVZUih06cG8Z-D1oKMciOFN9OHDAP2yWVOlrLKdfNwXPmH8vseY7naqVCwZkQBle80UNZvGQf7BsJPbznn40r0VGN-UBbeQNKlf2/s500/Veedu-%20Masimara-2023.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="261" data-original-width="500" height="167" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVNOI1iBEYDJFGPFD2HTcjM2xlU2a_jEFJpFe_iG-EPt6ZqVyXm4N4ldkQyAtK7aL_CyHSYjj6_8_8NUFzzDKGFVHSOVZUih06cG8Z-D1oKMciOFN9OHDAP2yWVOlrLKdfNwXPmH8vseY7naqVCwZkQBle80UNZvGQf7BsJPbznn40r0VGN-UBbeQNKlf2/s320/Veedu-%20Masimara-2023.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p>மாசிமாறா பயணக்கட்டுரை - ஒலி வடிவம்</p><p><br /></p><p><a href="https://www.youtube.com/watch?v=zhMSsWITl-c">https://www.youtube.com/watch?v=zhMSsWITl-c</a><br /></p>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-27475677332471337742023-06-27T08:58:00.003-07:002023-06-27T19:05:10.099-07:00Audio Story- By Kuru Aravinthan - சிறுகதை<p> </p><p>AUDIO - சிறுகதை - ஒலி வடிவம்</p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHeLfJbTrIUhXtRF9NQ-AeWw_GbhRBO3mJwWXNTDnlanB5J8Kqqy-hlI3dARSUq0x-mMQGq_Jw5E8_3EAVAU1PC9iQ1L-OVSET9BKqoyaVYDsxVBrrzApqnX2HbCcJcLhqFxG8tFMM9GNFOlnTKwMIcOh3DGjbMS8EyLo5usBMBbfYd2Y8qfIU8dVLfshW/s500/Veedu-Story%20Beach-2023.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="261" data-original-width="500" height="167" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHeLfJbTrIUhXtRF9NQ-AeWw_GbhRBO3mJwWXNTDnlanB5J8Kqqy-hlI3dARSUq0x-mMQGq_Jw5E8_3EAVAU1PC9iQ1L-OVSET9BKqoyaVYDsxVBrrzApqnX2HbCcJcLhqFxG8tFMM9GNFOlnTKwMIcOh3DGjbMS8EyLo5usBMBbfYd2Y8qfIU8dVLfshW/s320/Veedu-Story%20Beach-2023.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p>Audio story - By Kuru Aravinthan</p><p><br /></p><p><a href="https://www.youtube.com/watch?v=q-z7tFILGOA">https://www.youtube.com/watch?v=q-z7tFILGOA</a><br /></p>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-70237432580807548082023-06-27T08:52:00.003-07:002023-06-27T19:00:16.804-07:00Roman's Ambi Theater - உரோமரின் அம்பித்தியேட்டேஸ் - AUDIO<p> </p><p> <b><span style="color: #2b00fe;">உரோமரின் அம்பித்தியேட்டேஸ் - </span></b><span style="color: #2b00fe;"><b>ஒலி வடிவம்</b></span></p><p><span style="color: #2b00fe;"><b><br /></b></span></p><p><span style="color: #2b00fe;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="color: #2b00fe;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4bZ9TA6Ko2kl5cSHj75aCBfEupUyemRwnkU5yy5yQzFmz9_nR_o7QKr6wmDT06_KzxYQSOpAKJoe819jLIP-ZtUXQUfjBJXCJ8XOI2oVnEB7PLElKwBvVhM-9qZvAQc-_S1s1yCduAuYrKkd5e6PIahuswHHR4hyflvKiyfPypJn1Tw4YRaWkV3yys7hA/s500/Veedu-Ambi-2023.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="261" data-original-width="500" height="167" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4bZ9TA6Ko2kl5cSHj75aCBfEupUyemRwnkU5yy5yQzFmz9_nR_o7QKr6wmDT06_KzxYQSOpAKJoe819jLIP-ZtUXQUfjBJXCJ8XOI2oVnEB7PLElKwBvVhM-9qZvAQc-_S1s1yCduAuYrKkd5e6PIahuswHHR4hyflvKiyfPypJn1Tw4YRaWkV3yys7hA/s320/Veedu-Ambi-2023.jpg" width="320" /></a></span></div><span style="color: #2b00fe;"><br /><b><br /></b></span><p></p><p>By: Kuru Aravinthan</p><p><a href="https://www.youtube.com/watch?v=poW1ZB8JZm0">https://www.youtube.com/watch?v=poW1ZB8JZm0</a><br /></p>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-34006696835731644442023-06-27T08:41:00.005-07:002023-06-27T19:09:16.464-07:00TVI Interview- Kuru Aravinthan - Cinema Songs<p> </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="color: #800180;"><b>TVI Interview - Kuru Aravinthan</b></span></div><br /><br /><br /><br /><p></p><p><a href="https://www.youtube.com/watch?v=KCLrCm3cr9w">https://www.youtube.com/watch?v=KCLrCm3cr9w</a><br /></p><p><br /></p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEincZylidPYbmdZHJ56WSN3hSVcYsseo-JKzTAih6GtJ5NwrGu8vMwXXEv1oxRaT8SfqHjiQ4BN0YUWuAEFNoI1T88sXb-YOckk1KnpCz4P-Hwo9TC7TgM1eAW8hyZp73m6Jbxm24Mmy6J8gSR3rLPF_bZAk0BzJj8aGT8oEzwX9KmzxsVeFgJB-9v8y7Pr/s332/FB-%20Tvi%20interview-Kuru.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="322" data-original-width="332" height="310" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEincZylidPYbmdZHJ56WSN3hSVcYsseo-JKzTAih6GtJ5NwrGu8vMwXXEv1oxRaT8SfqHjiQ4BN0YUWuAEFNoI1T88sXb-YOckk1KnpCz4P-Hwo9TC7TgM1eAW8hyZp73m6Jbxm24Mmy6J8gSR3rLPF_bZAk0BzJj8aGT8oEzwX9KmzxsVeFgJB-9v8y7Pr/s320/FB-%20Tvi%20interview-Kuru.jpg" width="320" /></a></div><br />Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-32354102331800405642023-06-27T08:33:00.004-07:002023-06-27T18:51:06.992-07:00ROME- AUDIO - உரோம சாம்ராஜ்யம் - ஒலி வடிவம்<p><span style="color: #660000;"><b>AUDIO</b> </span></p><p><span style="color: #800180;"><b>உரோம சாம்ராஜ்யம் - ஒலி வடிவம்</b></span></p><p><span style="color: #800180;"><b><br /></b></span></p><p><span style="color: #800180;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="color: #800180;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGzwNp4i2moW1lngyzaUNwMMsG944DY2bBN9INqyvaKXNcn_-ehSHir1Drj5sgyQ1JMgS2HEpQEU9V9bbYTtLV0R-9_7BaAJa9MsMT1bAIM6Ti17Nk4RvD_lB9ki0-mpkKpERP58VS5knMs4uZ79PrlkfKIKr0X9wkqNhlHNUFeI165rhsU07ANiY-aKf3/s500/Veedu-Rome%20city-2023.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="261" data-original-width="500" height="167" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGzwNp4i2moW1lngyzaUNwMMsG944DY2bBN9INqyvaKXNcn_-ehSHir1Drj5sgyQ1JMgS2HEpQEU9V9bbYTtLV0R-9_7BaAJa9MsMT1bAIM6Ti17Nk4RvD_lB9ki0-mpkKpERP58VS5knMs4uZ79PrlkfKIKr0X9wkqNhlHNUFeI165rhsU07ANiY-aKf3/s320/Veedu-Rome%20city-2023.jpg" width="320" /></a></span></div><span style="color: #800180;"><br /><b><br /></b></span><p></p><p>BY: Kuru Aravinthan</p><p><br /></p><p><a href="https://www.youtube.com/watch?v=mKUPag00tR8">https://www.youtube.com/watch?v=mKUPag00tR8</a><br /></p><p><br /></p><p>https://www.youtube.com/watch?v=mKUPag00tR8</p>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-40608823861446570042023-06-27T07:57:00.004-07:002023-06-27T18:45:12.421-07:00CROATIA - குரேசியா - AUDIO<p> </p><p><br /></p><p><b>சுற்றுலாப் பயணிகளைக் கவரும் குரோசியா நாடு - ஒலி வடிவம்</b></p><p><b><br /></b></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr3Bnp7W1Lon3AMCWnerR2RmgYRkjm7sY0zeGJmbNbud6qs4fvFw-W4Foa578BCdvpYz3RS3v0yxs5ZFckAyviRvHrGX7OLcIm0X6-CCzQKLLGolGtCKhAQ4Z05rK3YuS3CldlDQGJv-iO3qnreJjzBkqoA_Amq4v_jtk6uu34g_KtpDi84xWYr309CpF9/s500/Veedu-Crotia-3-2023.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="261" data-original-width="500" height="167" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr3Bnp7W1Lon3AMCWnerR2RmgYRkjm7sY0zeGJmbNbud6qs4fvFw-W4Foa578BCdvpYz3RS3v0yxs5ZFckAyviRvHrGX7OLcIm0X6-CCzQKLLGolGtCKhAQ4Z05rK3YuS3CldlDQGJv-iO3qnreJjzBkqoA_Amq4v_jtk6uu34g_KtpDi84xWYr309CpF9/s320/Veedu-Crotia-3-2023.jpg" width="320" /></a></div><br /><b><br /></b><p></p><p><b>By: Kuru Aravinthan</b></p><p><br /></p><p><a href="https://www.youtube.com/watch?v=WO5u7pkPe3s">https://www.youtube.com/watch?v=WO5u7pkPe3s</a><br /></p>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650596457061461680.post-87233430075182353502023-06-25T19:07:00.003-07:002023-06-27T19:35:17.148-07:00Pyramids - பிரமீட்டுகள்.<p> </p><p><br /></p><p><b><span style="font-size: medium;">நைல்நதிக் கரையில் பிரமிக்க வைத்த பிரமீட்டுகள்.</span></b></p><p><b><span style="font-size: medium;"><br /></span></b></p><p><b></b></p><div class="separator" style="clear: both; text-align: center;"><b><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOhh9gChOAf5FiDroXBIxxjuyQnXloIGlt_XNLhctBIbjjPUSwmqQuQIXUgrjZuEZdSMNeIzy0LVeXVeOiV8aZ-J67BFaQJAMIS62YoHNwyqH-_e0TfuVcCZT-VO0CdNgfCmRJngGdEAe25tG30qevXzelZc_OwSZW0Iy1YqgtFjjBYteJwWlKbb4Bomql/s2185/Veedu-Egypt-5-Oct22.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1653" data-original-width="2185" height="242" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOhh9gChOAf5FiDroXBIxxjuyQnXloIGlt_XNLhctBIbjjPUSwmqQuQIXUgrjZuEZdSMNeIzy0LVeXVeOiV8aZ-J67BFaQJAMIS62YoHNwyqH-_e0TfuVcCZT-VO0CdNgfCmRJngGdEAe25tG30qevXzelZc_OwSZW0Iy1YqgtFjjBYteJwWlKbb4Bomql/s320/Veedu-Egypt-5-Oct22.jpg" width="320" /></a></b></div><b><br /><span style="font-size: medium;"><br /></span></b><p></p><p><b>குரு அரவிந்தன் </b></p><p>நான் சென்ற இடங்களில் ஒவ்வொரு இடங்களும் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு தனிச்சிறப்பு கொண்டதாகவே இருந்தது. இயற்கையை இரசிப்பதற்கு ஒவ்வொருவருடைய அந்தநேரம் உள்ள மனநிலையும் இதற்கு முக்கியமானது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே பார்க்க நினைத்த இடங்களைச் சென்று பார்த்து விடுவது நல்லது. கணக்காளராக இருப்பதால், பணி நிமித்தம் அதிக நாடுகளுக்குச் சென்றிருந்தாலும், சுற்றுலா போகும் போது நேரம் செலவிடுவது போலப் பணி நிமித்தம் செல்லும் போது, செலவிட முடியாது. இம்முறை எகிப்து, கெனியா, டுபாய் போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. விமானப் பயணநேரம் அதிகமானது என்றாலும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டேன்.</p><p>ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் உள்ள சர்வதேசவிமான நிலையத்திற்குச் செல்வதற்குச் சுமார் 5720 மைல் தூரத்தை விமானத்தில் கடக்க வேண்டும். இதற்குச் சுமார் 11 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் எடுக்கின்றன. விமானப்பாதை என்பதால், வடகிழக்கு நோக்கி நியூபவுண்லாந்து வரை சென்று அத்திலான்டிக் சமுத்திரத்தைக் கடந்து பிரன்ஸ், இத்தாலி ஊடாக மத்தியதரைக்கடலைக் கடந்து கெய்ரோ செல்ல வேண்டும். ஒரு அரைவட்டம் போடுவதைப் போல விமானப்பாதை அமைந்திருக்கிறது. அப்படி விமானப்பாதை சுற்றி வருவதற்கும் சில காரணங்கள் உண்டு. அங்கிருந்து ஐரோப்பா அருகே இருப்பதாலும், அட்லாண்டிக் சமுத்திரத்தை குறுகிய தூரத்தில் கடப்பதாலும், வளிமண்டலம் சாதகமாக இருப்பதாலும் இப்பாதையைத் தெரிவு செய்கின்றனர். தினமும் 1800 க்கு மேற்பட்ட விமானங்கள் இப்பாதையில் பயணிக்கின்றன. அங்கே சென்று இறங்கும் போது ரொறன்ரோ நேரத்தைவிட, கெய்ரோ கிழக்கே இருப்பதால் கெய்ரோவில் ஆறு மணி நேரம் முன்னதாக இருந்தது.</p><p>ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி பிரயாண முகவர் விமான நிலையத்திற்கு வந்து எங்களை அழைத்துச் சென்றார். அவருடன் வண்டியோட்டி ஒருவரும் வந்திருந்தார். விமானநிலையத்தில் இருந்து நேரடியாகவே பிரமீட்டுகளைப் பார்க்கச் சென்றோம். பிரமீட்களுக்கும், மம்மிகளுக்கும் புகழ்பெற்ற, எகிப்து நாட்டைப்பற்றி முதலில் சுருக்கமாக சொல்லலாம் என நினைக்கின்றேன். வரலாற்றில் நாங்கள் பண்டைய எகிப்திய நாகரிகம் பற்றிப் பள்ளியில் படித்தபோது, எகிப்தியர்களை நினைத்து வியந்திருக்கின்றோம். ஆப்பிரிக்கா கண்டத்தின் வடபகுதியில் உள்ள எகிப்திய நாடு 1953 ஆம் ஆண்டு குடியரசாக மாறியிருந்தது. இந்த நாட்டின் தலைநகர் கெய்ரோவாகும். சனத்தொகையைப் பொறுத்தவரையில் உலகின் 15வது அதிக சனத்தொகை கொண்ட நாடாக இருக்கின்றது. சுமார் 1,001,450 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட எகிப்து நாட்டின் மேற்குப் பக்கத்தில் லிபியாவும், தெற்குப் பக்கத்தில் சூடானும், கிழக்குப் பக்கத்தில் காசாக்கரை மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றை எல்லையாகக் கொண்டிருக்கின்றது. இதைவிட வடக்குக் கரையில் மத்தியதரைக் கடலும் கிழக்குக் கரையில் செங்கடலும் எகிப்தின் எல்லைகளாக உள்ளன. எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் தென்மேற்கு ஆசியாவில் உள்ளதால், இந்நாடு இருகண்டங்களைச் சேர்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எகிப்து ஆபிரிக்காவில் இருந்தாலும், அரபு நாடுகளில் ஒன்றாகத்தான் இதைப் பார்க்கிறார்கள். </p><p>வரலாற்றில் படித்த பிரபலமான நைல் நதி இங்கேதான் இருப்பதால், அதன் கரையில் நின்று அழகை ரசிக்க முடிந்தது. தண்ணீர் வசதி இருப்பதால் நைல் நதிக்கரை நிலங்கள் விவசாய நிலங்களாக இருக்கின்றன. சோளம், அரிசி, கோதுமை போன்றவை முக்கிய பயிர்களாக இருக்கின்றன. எகிப்தின் பெரும்பாலான நிலங்கள் சுமார் 90 வீதமானவை பாலைவனங்களாகவே உள்ளன. அதிக சனத்தொகை கொண்ட இடங்களாக கெய்ரோ, அலெக்சாந்திரியா, அல்-உக்சுர் போன்ற பெரிய நகரங்களைக் குறிப்பிடலாம். இங்குள்ள சகாராப் பாலைவனப் பகுதிகளில் குறைவான மக்களே வாழ்கின்றனர். 1970 ஆம் ஆண்டு 3900 சதுரமைல் பரப்பளவைக் கொண்ட அஸ்வான் அணை கட்டப்பட்டதால் விவசாயத்திற்குப் பெரும் உதவியாக இருக்கின்றது. பகலில் வெப்பமாகவும், இரவில் குளிராயும் இருக்கின்றது.</p><p>பண்டைய எகிப்திய ஆட்சியாளரான பாரோக்களுக்காகவே பிரமீட்டுகள் கட்டப்பட்டன. சுமார் 135 பிரமீட்கள் வரை எகிப்தில் இருப்பதால், எகிப்து பிரமீட்களுக்கும், மம்மிகளுக்கும் பிரபலமானதாக இருக்கிறது. கிஸா என்ற இடத்தில் பெரிய பிரமீட்கள் இருக்கின்றன. ஸ்பிங்ஸ் ஒவ் கிஸா எனப்படும் மனிதமுகம் கொண்ட சிங்கத்தின் பெரிய உருவம் இங்கேதான் இருக்கின்றது. ஏதோ காரணத்தால் அதன் மூக்கு உடைந்து போய் இருக்கிறது. கி.மு. 2700 தொடக்கம் 1700 வரை இந்தப் பிரமீட்கள் கட்டப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பிரமீட்கள் சில செங்கல்லாலும், சில கற்பாறைகளாலும் கட்டப்பட்டிருக்கின்றன. பெரிய பிரமீட்டின் உயரம் 455 அடியாக தற்போது இருக்கின்றது. இதைக்கட்டப் பல வருடங்கள் எடுத்திருக்கலாம். அனேகமான பிரமீட்கள் நைல்நதியின் மேற்குப் பக்கத்தில்தான் இருக்கின்றன. </p><p>கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அந்தப் பெரிய கற்பாறையை எப்படி மேலே கொண்டு சென்றார்கள் என்ற கேள்விதான் பிரமீட்டுகளைப் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்டது. மண்ணால் அணைக்கட்டுப் போல சுற்றிவரப் பாதைகளை அமைத்து அதன் வழியே பெரிய கற்களை மேலே கொண்டு போயிருக்கலாம் என்று வழிகாட்டி சொன்ன போது எனக்கு தஞ்சைப் பெரிய கோயில் ஞாபகம் வந்தது. சோழர்கள் இதேபோல யானைகளைப் பாவித்திருக்கலாம். அந்த நாட்களில் இதைவிட வேறு தொழில் நுட்பவசதிகள் இருந்ததாகத் தெரியவில்லை.</p><p>இலங்கையில் சமீபத்தில் நடந்த அமைதிப் போராட்டம் போலவே எகிப்திலும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது. அப்போது பதவில் இருந்த ஓசுனி முபாரக்கைப் பதவியில் இருந்து வெளியேறச் சொல்லிப் பொதுமக்கள் அமைதியான முறையில் போராடியதால், பெப்ரவரி மாதம் 2011 ஆம் ஆண்டு அவர் பதவி விலகவேண்டி வந்தது. ஒரு காலத்தில் செல்வச் செழிப்பு மிக்க நாடாக இருந்த எகிப்து, இப்போது நிதி பற்றாக் குறையால் அவதிப்படுகின்றது. அங்கே எதற்கெடுத்தாலும் எல்லா ஊழியர்களும் எல்லாவற்றுக்கும் பணம் எதிர்பார்க்கின்றார்கள். </p><p>ஆதிகாலத்து எகிப்தியர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். பண்டைய எகிப்தியரின் முக்கிய கடவுள்களாக <span style="font-family: Bamini; font-size: 14pt; line-height: 107%;">fshf</span><span face="Calibri, sans-serif" style="background: yellow; font-size: 12pt; line-height: 107%;"> Atum, Shu, Tefnut, Geb, Nut, Osiris, Isis,
Nephthys, and Set</span> இருந்தனர். இரட்டைப் பிறவிகளான வானத்தின் கடவுள் நியூட் என்னும் பெண் தெய்வத்தின் சகோதரனான ஜெப் தான் அவரது கணவனாகவும் இருந்ததாகவும், அவரைப் பூமியின் கடவுளாக வணங்கியதாகவும் தெரிகின்றது. (<span face="Calibri, sans-serif" style="background-color: yellow; font-size: 12pt;">The
earth god Geb, who represents dry land, is the husband of sky goddess Nuit</span> ) இவரைப் பாம்புகளின் தந்தை என்றும் அழைத்தார்கள். இலங்கையிலே தமிழர்கள் நாகவழிபாட்டில் ஈடுபட்டு நாகதம்பிரானை வழிபட்டதைபோலவே, எகிப்திலும் நாகக் கடவுளான ஜெப்பை வழிபட்டார்கள். இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான சகோதரனை நியூட் திருமணம் செய்தது போலவே, அழகிய அரசி கிளியோபத்ராவும் தனது சகோதரனான அன்டனியைத் திருமணம் செய்ததாக வரலாறு கூறுகின்றது. இப்போது உள்ள சமூகக் கட்டுப்பாடுகள் அக்காலத்தில் இல்லாததால், இது நடந்த காலத்தை நாம் கவனத்தில் கொள்ளும் போது, அந்தத் திருமணத்தைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. இப்போது நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களும் கட்டுப்பாடுகளும் காலப்போக்கில் சமூக ஒழுக்கம் கருதி, இடங்களுக்கு ஏற்ப மனிதனால் ஏற்படுத்தப்பட்டது தானே. </p><p>எகிப்தியரின் ஆதிமெழியைக் ஹைட்ரோகிளிப்ஸ் என்று அழைக்கிறார்கள். ஓவியங்கள் மூலம் இது வரையப்பட்டிருக்கின்றது. எங்கள் புடைப்புச் சிற்பங்கள் போல கால்கள், பாம்புகள் போன்ற உருவ அமைப்புக்கள் இதில் இருக்கின்றன. பிரமீட்களின் உட்பகுதிகளில் இந்த எழுத்துக்ளைக் காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் தங்கள் வரலாற்றைப் பதிவு செய்யவே இந்த முறையைக் கையாண்டனர். எப்படி எங்கள் கல்வெட்டுகளில் உள்ள தமிழ் மொழியை முற்றாக வாசிக்க எங்களால் முடியவில்லையோ, அதே நிலைதான் அவர்களுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.</p><p>எகிப்தியர்கள் ஒட்டகங்களுக்குப் பதிலாகக் கழுதைகளையே முன்பு போக்குவரத்திற்குப் பாவித்தார்கள். இதைவிட நீண்ட நைல் நதியையும் படகுகள் மூலம் போக்குவரத்திற்குப் பாவித்தார்கள். தற்போது பிரமீட் பகுதிகளில் ஒட்டகங்களிலும், குதிரை வண்டிகளிலும் மக்கள் பயணிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. கால்வாய்கள் மூலம் குடியேற்றங்களுக்குத் தண்ணீர் வசதிகள் கிடைத்தன. வேட்டையாடுதல், மீன் பிடித்தல், விவசாயம் போன்ற தொழில்கள் இடம் பெற்றிருக்கின்றன. பண்டைய எகிப்தில் காணப்பட்ட நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, தீக்கோழி போன்றவை முற்றாக இப்போது இங்கே அழிந்துவிட்டன. அஸ்வான் அணைக்கட்டின் தென்பகுதியில் மட்டும் முதலைகள் காணப்படுகின்றன. </p><p><br /></p><p>ஏராளமான தெருநாய்களைக் காணமுடிந்தது. நாய்கள் மனிதரின் ஆடைகளைத் தொட்டால் அவர்களின் பழக்கப்படி உடனடியாக ஆடைகளை மாற்ற வேண்டுமாம். ஏழு தடவைகள் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டுமாம். அதனால் வீடுகளில் நாயை வளர்ப்பதில்லை, நாய்களுக்குப் பதிலாகப் பூனைகளை வளர்க்கின்றார்கள்.</p><p>பெண்களும் அரசபதவியில் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஹட்செப்ஸீட் என்ற அரசி 20 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்தார். சகோதரியைச் சகோதரன் திருமணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது. கிளியோபத்ரா உரோமத் தளபதி யூலியசீஸரை மணம் முடித்தார். அவர் போரில் கொல்லப்பட்டதும் அரச பதவிக்காகச் சொந்தச் சகோதரனான அன்டனியைத் திருமணம் செய்தார். பண்டைய எகிப்தில் பார்வோன் மன்னர் வம்சத்தில் வந்த 7வது கிளியோபத்ராவான இவர் எகிப்தின் கடைசி அரசியாக கிமு 32 வரை ஆட்சி செய்தார். அதன்பின் எகிப்து உரோம பேரரசின் ஒரு மாகாணமாயிற்று. அதன்பின் அரேபியர், துருக்கியர், பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.</p><p>சுமார் 6 அடி உயரம் வளரக்கூடிய பைப்பிரஸ் (<span face="Calibri, sans-serif" style="background-color: yellow; font-size: 12pt;">Papyrus</span> ) என்ற குறிப்பிட்ட ஒரு செடியின் தண்டில் இருந்து எப்படிப் பண்டைய எகிப்தியர் பேப்பர் தயாரித்தார்கள் என்பதை ஒரு பெண்மணி செய்து காட்டினார். அந்தச் செடியின் தண்டை நசுக்கித் தட்டையாக்கி வாழைநார் போல ஒன்றோடு ஒன்றைப் பின்னிப் பேப்பர் தயாரித்துக் காட்டினார். அதற்குச் சாயம்பூசிச் சித்திரங்கள் வரைந்து விற்பனை செய்கின்றார்கள். நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்கக்கூடியதாம்.</p><p>கெய்ரோவில் உள்ள அரும்பொருள் காட்சியகத்திற்குச் சென்றோம். 1901 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பண்டைய எகிப்திய இனத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அருங்காட்சியகமாக இது இருக்கின்றது. 2019 ஆண்டு புதிப்பிக்கப்பட்டது. சுமார் 120,000 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கே ஏராளமான மம்மிகளைக் காணமுடிந்தது. அரசகுடும்ப அரசர்கள், அரசிகளின் மம்மிகள், சிறுகுழந்தைகளின் மம்மிகள் என்று நிறையவே சேகரித்து வைத்திருக்கிறார்கள். இங்கே உள்ள துட்டான்காமுன் என்ற மன்னனின் பிரேதப்பெட்டியே தங்கத்தால் செய்யப்பட்டது. இதைவிட முடி, ஆபரணங்கள் என்று எல்லாமே தங்கத்தாலானவை. சுமார் 1.2 கோடி டொலர்கள் பெறுமதியானவை. </p><p><br /></p><p>முதலாவது மாடியை கி.மு 1550 களின் கல் சிலைகள் அலங்கரிக்கின்றன. எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி, பித்தளை போன்றவற்றால் செய்யப்பட்ட பலவகையான நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய எகிப்திய வர்த்தகத்திற்கு சான்று கூறுவதுபோல, பழைய எகிப்திய மொழி, கிறீக், லற்ரீன் மற்றும் அரபிக் மொழிகள் இந்த நாணயங்களில் பதிக்கப்ட்டிருக்கின்றன. </p><p>எகிப்தின் மிகப்பழைய கட்டிடங்கள், மசூதிகள், அங்காடிகள் போன்றவற்றையும் சென்று பார்த்தேன். மக்கள் கூட்டம் மிக நெருக்கமாக இருந்தது. அந்த இடங்களில் பாதுகாப்பு இல்லாததால், அதிக நேரம் அங்கே செலவிட முடியவில்லை. எகிப்திலே பல இடங்களைப் பார்த்தபோது, எனக்குத் தெரிந்த, எங்கேயோ பார்த்த பல இடங்கள் நினைவுக்கு வந்தன. எங்கே பார்த்திருப்பேன் என்று யோசித்துப் பார்த்த போதுதான் ரென் கொமாண்மென்ட், கிளியோபத்ரா, பெயர்கேம், ஜம்பர், ஜேம்ஸ்பொண்ட் 007 ‘த ஸ்பை கூ லவ்மி’ போன்ற படங்களில் பார்த்த சில காட்சிகள்தான் அவை என்பது தெரியவந்தது. </p><p><br /></p><p><br /></p>Kuru Aravinthanhttp://www.blogger.com/profile/12396345709059852991noreply@blogger.com0